இரக்கமற்ற பொழுதுகள்
எங்கேயும் நிறைந்து ,
சுவாசிக்க இயலா அடர்வில்
அழுத்துகின்றன ....
நேற்று , இன்று ,நாளை
என்ற கால அட்டவணைகள்
பிரித்து எழுதவோ
எதிர்த்து வாதிடவோ அவை
தயங்குவதில்லை ....
இருள் சூழ் வேளைகளிலும்
ஒற்றையாய் பாய்மரம்
விரித்து தனித்தே
சென்று கொண்டு இருந்தது
எண்ணப்படகு........
மையப் புள்ளியாய்
புரிதல்கள் விடுத்து
சுற்றிலும் அடங்கலற்ற
விரிதல்கள் ,விவாதங்களும்
அவைகளுள் அதீதம்
தனித்து போன
அப்பொழுதுகள் உட்சொருகி
ஓர் சுழல் வட்டமிட்டு
சுவர்கோழியின் ரீங்கராத்தோடு
கூச்சல் இட ......துவங்குகிறது
மற்றுமோர்
இரக்கமற்ற பொழுதின்
அத்தியாயம் ...
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5895
எத்தனையோ தபா சொலிச்சு வேண்டாம் டீ.. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப்போகுது அப்படின்னு.. கேட்டேனா.. இல்லையே. திங்க, தூங்க, சினிமா பாக்க.. எதாவது ஒரு ஹீரோ வந்து என்கூட டூயட் பாடுவான்ன்னு மனசு நம்புச்சு. அப்போ பார்த்து அந்த சலீம் கடை டீ போடற பாஷா பார்த்து சிரிச்சான்.
அங்கே அக்கா ஒரு கடைல சாப்பாடு வாங்கி குடுத்துச்சு. அங்கேயே பல்லு விளக்கி சாப்டுட்டேன்.