எங்காகிலும் தட்டுபடுகிறதோ
அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ?
நீள் கோடுகளும் அங்காங்கே
புள்ளிகளுமாய்..
அழகின் ஒரு பகுதியை
குத்தகைக்கு எடுத்த பிம்பமென
தாவி தாவிப் பறக்கும் அது …?
மனம் கவர்ந்திழுத்த அதன்
நினைவுகளில்
அழுகிப்போன இதயங்களின்
சுவடுகள் ஏதும் பதிப்பிக்க
அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய் இல்லை …
மெல்லிய இறக்கைகள் விரித்து
பறக்கும் அவைகளில்
கனந்து போன துன்பங்கள்
கரைந்து போக …
மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும்
கரைக்க ….ஏதோ ஓர் பிறப்பின்
ஆரம்பமும் …முடிவும் …
ஒருங்கே பிரசவித்தது ….
0 comments:
Post a Comment