Sunday, February 28, 2010
இவள்...
மரபுகள் மீறி சிந்திக்கும்
இலக்கணம் தாண்டிய கவிதை
இவள்....
புது கவிதையா?
புதிர் கவிதையா?
இல்லை இவள்...
புதிரான புது கவிதை..
.
சுட்டெரிக்கும் சூரியனா?
குளிர்விக்கும் வெண்ணிலவா?
இல்லை இவள்...
குளிர்விக்கும் சூரியன்...
ஆம்
என்றும்...
முடிவுகளில் ஆரம்பம் தேடும்
இவள்....
குளிர்விக்கும் சூரியன்...
புதிரான புது கவிதை.....
'தனிமை'
இருட்டறையில் ....
கதவோரமாய் ....
சுருண்டு கிடந்தேன் .....
சுவரில்லா சித்திரமாக ....
'தனிமை'யின் கொடுமையில்
உயிர் இருந்தும் நடை பிணமாய் ....
உனக்கு தெரியும் உன்னில்
நான் அடக்கம் என்பது ....
தெரியாதது...
நீயில்லாமல் நான்
அடங்குவது
ஏன் சென்றாய்?
எங்கு சென்றாய்?
குயில் கூவும் வேளையிலும் ....
கோட்டன் கத்தும் வேளையிலும் ...
என்னை தனியாய் தவிக்க விட்டு.....
விளக்கில் சிக்கிய விட்டிலாய்
நான் .....
மரணத்தின் ஓலத்துடன் ....
இதுவும் கடந்து போகும்
நீ அடிக்கடி சொன்ன போது ..
தெரிய வில்லை நீயும்
என்னை கடந்து போவாய்
என்பதை .......
இரவு வானம்
இயற்கை நெசவாளியின்
தேர்ந்த படைப்பின்
அணிவகுப்போ இந்த
வானபோர்வையின் வண்ண சிமிட்டல்கள் .
வேண்டிய சாயங்களை
பூசி கொள்கிறது
மனம்......
மகிழ்ச்சியும் துக்கமும்
ஊடு பாவும் சந்து பாவுமாய்
காதலனை கை பிடிக்க போகும்
கனவுகளை சுமந்து கொண்டு
மகிழ்வோடு விண்மீன்களை
எண்ணி கொண்டு
கன்னி ஒருத்தி.......
கிழிந்த நாராய்
கயிற்று கட்டிலில்
காலனுக்காக காத்து கொண்டு
நட்சதிர கோள்களை நொந்து கொண்டு
கிழவி ஒருத்தி......
நன்றி
திண்ணை
ஒற்றை வார்த்தை ....
போய் கொண்டே இரு..
உனக்கான பாதை தெரியும் என்றார்கள்
போய்க் கொண்டே இருக்கிறேன்...
உன்ஒற்றை வார்த்தைக்காக....
பாதை நீண்டதே தவிர ...
பயணம் முடியவில்லை.....
படிக்க நான் எடுக்கும் புத்தகத்தில்
கூடத் தொக்கி நிற்கிறது
உன் ஒற்றை வார்த்தைக்கான தேடல்...
தெரிந்தே கொடுத்த ரணம்
வார்த்தைகளின் வடு..
வலிக்கிறது....
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான்.....
பேசும் போது
தோன்றாத சலனம்
உன் மௌனத்தில் தோன்றியது
வார்த்தை தவறுவதில்லை நீ
வதைக்கிறாய் உன் அமைதியால்
ஆதலால் மீண்டும் கேட்கிறேன் ...
மன்னித்து விடு............
எப்போதும் நீ..
LIVING.....
Subscribe to:
Posts (Atom)