பாசி பற்றி இருந்த
குளத்தின் அடியில்
தெளிவாக கிடந்தன
நினைவுத்தேக்கங்கள் ...
பிரபஞ்சம் அமைதியின்
வசம் ஒப்புக்கொடுத்த
அடர்வின் நிறமிகள்
தீண்டப்படாமல் ....
ஞாபகச்சட்டையின்
தோல்களை உரித்து
ஊர்ந்து செல்கிறது
காலப்பாம்பு .
கால கோள்கள்
இடம் மாறிச்செல்ல
சுயம் அற்று இருந்த
விடுதல்கள்
அவிழத் துவங்கியது