கண்ணாடி முன் நிற்கையில்
என்னை விழுங்குகிறாய்
பிம்பமாய் விழுந்திடும்
உன்னை மறைக்கும்
நீ யார் ?
நீ யார் ?
என்ன உன் பெயர் ?
ஏன் வருகிறாய் என்னுடனேயே?
விவாதிக்கையில் என்றுமே
எதிர் சாட்சியம் சொல்லும் நீ
சரியெனவும் தவறெனவும் சிக்கல்களுண்டாக்கி
அவிழா முடிச்சுக்கள் கோர்த்து
குற்றமாலை வாசிக்கிறாய்
சரி சரி இனி இப்படி இருக்காதே
எனப் பிடி தளர்த்துகிறாய்
சிலந்திகள் கோர்த்துவிட்ட
பின்னலாடையென இறுகி
மூச்சறுந்து போகும் வேளையில்
விட்டு விட்டு சுவாசம் தவிர்க்கிறாய் ..
மெல்ல மெல்ல சிக்க வைத்து
மெல்ல மெல்ல சிக்க வைத்து
விடுவித்து ஆவி விடுத்து மூச்சு பிரிகையில்
மட்டுமேன் சட்டையாய் அவிழ்கிறாய்???