skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Tuesday, August 2, 2011

அவன் ஆனவன்




பெயர்களேதுமற்றே 
உருவாகிறான்
இருளின் சுவடுகளில் 
அடையாளமின்றித் திரிந்து 
காற்றினூடு சஞ்சரிப்பவனுக்கு
இப்பொழுதும், எப்பொழுதும் 
கொடுக்கப்படவேயில்லை
பெயர்களேதும் 

அன்னியர்களையும் ஈர்ப்பதே செயலாகியவன்இருளின் சப்தம் நிரம்பிய
அறையின் கதவுகளிடையே 
முனகிக் கொண்டிருந்தான் 

பதிப்பிக்க முயன்று பின் 
கையெழுத்துப் பிரதியுடன் 
நின்று போனது
என்னில் அவனது வார்த்தைகள் 



தொடர்வதிலேயே தொடர்ந்து 
நின்று விடும்
எங்கள் இறுதிச் சந்திப்பு என்றும் 
வரையறுக்கப்படுவதே இல்லை 


அந்திம வேளைகளிலும்
வார்த்தைகளைத் துப்பி

கவிதை செய்தே 
என்னை துரத்துகிறான்  

வெற்றுக் கோப்பைகளை  நிறைக்கும் நீரினைப் போல 
நுரைத்துப்  புறப்பட்டு
வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து 
இறுதியில் அடங்குகிறான் 
பெயரேதுமற்றவன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4604
Posted by shammi's blog at 9:34 AM
Labels: உயிரோசை

3 comments:

மாய உலகம் said...

வார்த்தைகளைத் துப்பி
கவிதை செய்தே
என்னை துரத்துகிறான் //

வார்தைகளை துப்பி .... வாவ் வரிகளில் புதுமை

August 19, 2011 at 3:20 PM
மாய உலகம் said...

வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து
இறுதியில் அடங்குகிறான்
பெயரேதுமற்றவன்//

கவிதைகளிலும் வரிகள் கலக்கல் ஜாலங்களாக ஜொலிக்கின்றன.... வாழ்த்துக்கள்

August 19, 2011 at 3:22 PM
shammi's blog said...

mikka nandri....

August 19, 2011 at 9:26 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ▼  August (4)
      • நீ யார்???
      • எங்கோ தொலைந்த அவள் . ..
      • கனா தேசத்துக்காரி
      • அவன் ஆனவன்
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio