நிழல் ஒன்று அழைத்தது
நிஜம் எனக் கொண்டு ..அருகினில் செல்ல
பூஞ்சாரல்
பொய்த்துப் போனது
கானல் நீராக ...
ஒளிகற்றை ஒன்று
சூரியன் எனக் கண்டு
பகல் புலர
இருள் சூழ்ந்தது
கரிய நிழல் விழுங்க
மொட்டொன்று அவிழ
பூவெனக்கண்டு
மகரந்தம் தேடி
வண்டென மயங்கி
உயிர் மாய்த்ததென்ன ?
ஒன்றை
தொலைத்துத்தேடி
தேடித்தொலைத்து
கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன ?