skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Tuesday, May 1, 2012

மரப்பாச்சி ..


கோகிக்கு காலம்பர எழுந்ததுலர்ந்து வேலை சரியாக இருந்துண்டு இருந்தது ...அவள் தனக்கு தானே பேசிண்டு இருந்தாள்....இனி கோகியின் பார்வையில் .....

'ஆத்துல கொலு ..வேலை அம்பாரமான்ன குமிஞ்சுன்னா  கிடக்கு ..காலேஜ் போன அம்பி இன்னும் வந்தபாடில்லை ...அவாஅவா ஒரு வேலை செய்யப்படதோ ? செய்ய மாட்டா ..நேக்கு நன்னா தெரியும் இவாள பத்தி ....மாங்கு மாங்குன்னு செய்யணும்னு பகவான் என்னை படச்சுட்டன் '... 

மாமி எங்கேர்ந்தோ  கத்தினாள்"  கோகி ! அடி கோகி ! இங்க சித்த வாயேண்டி ...ஒரு நாழியாறது காபி கேட்டு ..."
இந்த ஆம்ல என்னைவிட்டா நாதி கிடையாது இந்த பரண் அடுக்க , அடுக்களை வேலை செய்ய ...

"தோ வந்துட்டேன் மாமி  ..சித்த இருங்கோ கை வேலைய முடிச்சுட்டு காப்பி தரேன் ..."

அப்படியே  எடுத்த பொம்மையை வெச்சுட்டு அடுக்களை போய் டிகாக்ஷன் இறக்கி ..பால் காய்ச்சி ..ஸ்ட்ராங்கா ஒரு மிடறு முழுங்கினேன் ...

மீண்டும் மாமி அழைத்தாள் "டீ....என்ன பண்றாய் ...? இன்னுமா காபி இறங்கல ?"

"வந்துட்டேன் தோ" ...ஆவி பறக்க நீட்டினேன் ...

"வர வர கிழம் அப்டின்ற எண்ணம் நோக்கு வந்துடுத்து.... டீ..."

இல்லை மா ...கொலு பொம்மையை பார்த்துண்டு இருந்துட்டேன் அது தன் நீங்க கூப்பிட்டதும் உடனே வரமுடியல...என சமாதானம் செய்தேன் 

"ஹ்ம்ம் ....என்ன தான்  சொல்லு கோகி ! நோக்கு முன்னபோல என்மேல் ப்ரியம் இல்லடி ...முன்ன எள்ளுனு சொல்லரச்சே எண்ணையாய் நிற்பாய் ..இப்போ அசமஞ்சம் கொஞ்சம் வந்துடுத்து..."

இல்ல மா அப்படி சொல்லாதேங்கோ ...நீங்க தான் நேக்கு எத்தனை செஞ்சு இருக்கேள் ....மாமியா இருந்தாலும் நேக்கு ஒரு தாய் ஸ்தானம் இல்லையா நீங்கோ .... மனசுல ஏதோ எண்ணம் ஓடினாலும் காமிக்க முடிய்மோ? இது வாக்கப்பட்ட இடம்மாச்சோல்லியோ ?

"சரி டீ போய் வேலைய பாரு...அப்புறம் நேரம் ஆய்டும் ...அம்பி வரப்போல அடை தட்டி அவியல் பண்ணிடு ..."

கிட்டான் வந்துண்டு இருந்தான் ....
மாமியிடம் "சரி மா போய் அந்த பரண்ல இறுக்க மாம்பெட்டிய இறக்கிறேன் ..கிட்டான் வந்து இருக்கான் ..அவன சித்த நாழி ஒத்தாசை பன்னசொல்லுங்கோ ...அப்போ தான் பரண்ல இருந்து மரப்பாச்சியை எடுக்க முடியும் ...
"டேய் கிட்டான் சித்த பரண் மேல ஏறி அந்த சின்ன பெட்டியே எடேன் டா ..."

"சேரி மாமி ...தோ வரேன் ...
இதுதானுங்களா நல்ல பார்த்து சொல்லுங்க அப்புறம் இன்னொரு தபா ஏற சொல்லாதீங்க ...எனக்கு வேலை கிடக்கு "

அதே தான் டா ...ஹ்ம்ம் ..மெல்ல ...

இனி நீ போய் வேலைய பாரு ...

அந்த பெட்டில இருந்து ஓர் நெடி பரவித்து...கொஞ்சம் பழசு கலந்த வாசம் ...ஸ்மரணை எங்கோ இழுத்துண்டு போச்சு ..பெட்டில ...ஒரு பொம்மை கரெல்னு கருப்ப ஈஷிண்டு ...ஆன பரம லக்ஷணமா இருந்துத்து, அதை கைல எடுத்தேனோ, இல்லையோ ...அது பேச ஆரம்பிச்சுடுத்து...சிரிக்காதே ள் ..உண்மையான்ன சொல்றேன் ...

" டீ கோகி.., என்ன தெரியறதா? ..

இல்லையே ...நேக்கு தெரியலை ..ஆன உன் குரல் எங்கோ கேட்டாபல இருக்கு ...

"இருக்கும் டீ ...நீ சின்னவளா இருக்கச்சே எப்போவும் ஓர் மரப்பாச்சி பொம்மையோட ஈஷேண்டே இருப்பாய் இப்போ பெரியவளானதும் கொலுக்கு மட்டும் என்னை எடுத்து சீராட்ட நினைக்கிறாய் "

ஆமாம் இப்போ நினைவு வந்துத்து ...சின்னவளா இருக்கச்சே வசந்திக்கும் நேக்கும் எப்போவும் போட்டியா இருக்கும் உன்னை வெச்சுக்கரதுல ...எப்போவும் நான் தன் அவளாண்ட சண்டைபோட்டு வாங்கிண்டுடுவேன் , அப்போ எவ்ளோ பிடிவாதமா இருப்பேன் ..இப்போ நான் தான் இந்த ஆம் லையே பொறுமைக் காரி தெரியுமோ ?

"ஹ்ம்ம் அப்படி தான் தெரியறாய் ...ஆன எப்போவும் செய்றத செஞ்சுட்டு நான் நான்னு பிலாக்கணம் பாடறாய் அது தான் கொஞ்சம் கூட நன்னால்லை "

நோக்கு என்ன சொல்லிடறாய் நான் படர பாடு இருக்கே ...

"இதை இதை தான் சொல்லறேன் ...எப்படியும் செய்ய போறாய் , அப்புறம் ஏன் இப்படி? ஒரு முறை எனை கிழே விட்டுட்டாய்அப்போ என் கை உடைஞ்சு போச்சு ..அதுக்காக நீ பண்ணின ஆர்ப்பாட்டம் ...பகவானுக்கு தான் தெரியும் ...என் கைய உடனே வைக்கனும்னு அழுது ஆகித்தியம் செய்தாய் ..இப்போ அது இல்லைனாலும் நீ என்ன மாறி இருக்காய் தெரியுமோ ? உன்னை பத்தி நெனைக்கறது இல்லைன்னு , எல்லார் மேலவும் குற்றம் பார்க்கிறாய் ...நிஜமாய் நீ ஒரு மிடறு காபி விழுங்கும் போதே மாமிக்கு காபி கொடுத்து இருக்கபடதா ?அவ கத்தற மட்டும் ஏன் விட்டாய் ?"

உள்ளுக்குள் லேசாய் ஓர் முள் நிரடித்து இருக்குமோ ? நாம அசட்டை பண்ண ஆரம்பிக்கிறோமோ?..நேத்தும் இதே தான் பண்ணினேன் ...சாப்பாடு போட நாழிப்பண்ணினேன் ...பாவம் மாமி அவளால முடியலை அது தான் ஒத்தாசை கேட்டாள் ...பண்ணறத பிலாகனத்தோடு ஏன் பண்ணனும் ...மாமி எத்தனை செய்து இறுக்க சிரிச்ச மொகமா...

" கோகி! இப்போ புரியறதா டீ  ...என்ன சொலறேன்னுட்டு ..."

"ஹ்ம்ம் "....

"அடைக்கு ஊரப்போடரச்சே கொஞ்சம் போல சட்னி செய் ..அம்பிக்கு ரொம்ப இஷ்டம் " மாமி குரல் கொடுத்தாள் ..

விழிப்பு தட்ட எழுந்தேன் , மறுபடியும் செக்கு மாடு ஆட்டமா ,வேலை சொல்லராலே,என்ன செய்ய ,சித்த நேரம் நான் சும்மா இருக்கபடாதே  மாமிக்கு ....

கையில் மரப்பாச்சி சன்ன சிரிப்பு சிரித்தது ....***


Posted by shammi's blog at 6:08 AM
Labels: அதீதம்

2 comments:

RAM said...

Awesome !!!

May 14, 2012 at 6:19 AM
shammi's blog said...

thanks ram....

May 15, 2012 at 10:15 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ▼  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ▼  May (3)
      • யாதுமாகி …
      • இறக்கை முனையில்
      • மரப்பாச்சி ..
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio