சிற்சில சொல்லாடல்கள்
பிரித்து அறியப்படாமலே
வாதங்கள் என
மேல்போர்வை கொண்டு
ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன ..
மீட்சி என்னும் சொல்லறியா அவை
தனக்குள் முடங்கி
"தான் " விடுத்து..
தர்க்கத்தில்
கலந்து பிணைந்து பின்னர்
தானாய் கரைந்தும் விடுகின்றன
அவைகளுள் சிலவோ
நீரினடியில் வேர் பிடித்து
தண்டின் வழி உண்டு
எங்காவது மலர
சேற்றின் அடியில் இன்னும்
சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன
அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை ...
http://puthu.thinnai.com/?p=4895
0 comments:
Post a Comment