இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன
http://puthu.thinnai.com/?p=14120
அவைகளின்,
விரல் பிடித்தே வெளிச்சங்கள்
கதிர்களின் கிரகணங்கள் படர
மீண்டு வரா தொலைவில்
புதைந்தன கனவுகளின் வாத்சல்யம்
நிழலின் படங்கள் ஒருபோதும்
கலைவதோ அல்ல கலைக்க படுவதோ இல்லை ...
எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு
நிகழ்விலும் தலைப்படும்
அவை ...
தர்கிக்கும் ..
உருகி நிற்கும் தருணங்கள்
உறையும் நிகழ்வுகள்
இவைகள் கிரகண பொழுதில்
ஒளிகள் அற்று இன்னும் சுற்றி
சூர்யனை தகர்க்கும் ...
துகள்கள் சிதறி வளியின்
அடர்வு அதிகப்படும்
புரியாத காலங்களில்
வாத்சல்யம் அற்று மீண்டும்
இருளை கை பிடித்து அழைத்து
செல்கின்றன கற்றையாய்
நின்ற கிரகங்கள் ...
1 comments:
nice one on big bang ;-)
Post a Comment