எங்காகிலும் தட்டுபடுகிறதோ
அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ?
நீள் கோடுகளும் அங்காங்கே
புள்ளிகளுமாய்..
அழகின் ஒரு பகுதியை
குத்தகைக்கு எடுத்த பிம்பமென
தாவி தாவிப் பறக்கும் அது …?
மனம் கவர்ந்திழுத்த அதன்
நினைவுகளில்
அழுகிப்போன இதயங்களின்
சுவடுகள் ஏதும் பதிப்பிக்க
அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய் இல்லை …
மெல்லிய இறக்கைகள் விரித்து
பறக்கும் அவைகளில்
கனந்து போன துன்பங்கள்
கரைந்து போக …
மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும்
கரைக்க ….ஏதோ ஓர் பிறப்பின்
ஆரம்பமும் …முடிவும் …
ஒருங்கே பிரசவித்தது ….
எத்தனையோ தபா சொலிச்சு வேண்டாம் டீ.. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப்போகுது அப்படின்னு.. கேட்டேனா.. இல்லையே. திங்க, தூங்க, சினிமா பாக்க.. எதாவது ஒரு ஹீரோ வந்து என்கூட டூயட் பாடுவான்ன்னு மனசு நம்புச்சு. அப்போ பார்த்து அந்த சலீம் கடை டீ போடற பாஷா பார்த்து சிரிச்சான்.
அங்கே அக்கா ஒரு கடைல சாப்பாடு வாங்கி குடுத்துச்சு. அங்கேயே பல்லு விளக்கி சாப்டுட்டேன்.




