skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, March 7, 2010

கடைசி பக்கம்


ஆஸ்பத்திரி நெடி ..
உடலெங்கும் குழாய்கள்...
உள்ளுக்குள் அமிழ்கிறேன் நான் 
முன்னும் பின்னுமாய் 
புரையோடிப் போன ஞாபகங்கள் ...
காற்றில் மிதக்கும் சருகுகளாய்

நேரம் கணக்குக்கு உட்படுகையில் 
எண்ணிலடங்கா நினைவலைகள் 
ஆர்பரிக்கும் கடல் அலையாய்
முதல் காதல் தொடங்கி 
கடைசி வாக்கு வாதம் வரை
நிகழும் நிழல் பிம்பமாய் ....

"அரைமணி தாண்டாது" சொற்கள் 
கேட்டபோது 
அனிச்சையாய் தேடி  பார்கிறேன்
அள்ளி தெளித்தது போல்
அவசரகதியாய் வாழ்ந்த வாழ்க்கையை 
தவித்த நாட்களையும்
தவிக்கவிட்ட நாட்களையும் 

"எங்கு தவறினேன் நான்?"
தலைமாட்டில் அம்மா
சுற்றிலும் உறவுகள் 
நான் உதறித்தள்ளிய சொந்தங்கள் 
தவறுகள் மன்னிக்க படும் தருணம் 

ஏறி இறங்கிய நெஞ்சுக்குள் இருந்து 
வெளியேறியது கடைசி வெப்ப காற்று
அடங்கினேன் நான்...
வாழ்ந்த வாழ்வின் பொருள் தெரியாமலே ........






Posted by shammi's blog at 9:54 PM

2 comments:

Unknown said...

//அனிச்சையாய் தேடி பார்கிறேன்
அள்ளி தெளித்தது போல்
அவசரகதியாய் வாழ்ந்த வாழ்க்கையை
தவித்த நாட்களையும்
தவிக்கவிட்ட நாட்களையும் //

//ஏறி இறங்கிய நெஞ்சுக்குள் இருந்து
வெளியேறியது கடைசி வெப்ப காற்று
அடங்கினேன் நான்...
வாழ்ந்த வாழ்வின் பொருள் தெரியாமலே ........//

வலிமிகு அடர்த்தி இவ்வரிகளில்..!!
கவிதை Marvellous..!

March 12, 2010 at 1:46 AM
shammi's blog said...

thanks sir and i value your words very much.....

March 12, 2010 at 5:28 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ▼  March (16)
      • அப்பாவனம்
      • மீண்டும் இறக்கிறேன்......
      • கடிவாளம்
      • காகிதப்பூக்கள்
      • SILENT KILLER
      • சூழ்நிலைக்கைதி
      • நீயும் நானும்
      • மனிதன்-(DIVERTED)
      • முதிர் கன்னி
      • கடைசி பக்கம்
      • பெண் சிசு ...(.தற்கொலை )
      • காதல் தோற்பது இல்லை......
      • நிஜம் தொலைத்த மனிதர்கள்
      • இதற்கு பெயர் என்ன? காதலா?
      • ஒரு கொங்குநாட்டு காதல் .....
      • LONE WORD(translation of otrai varthai)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio