skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, February 27, 2011

எதோவொன்று



நிழல் ஒன்று அழைத்தது
நிஜம் எனக் கொண்டு ..
அருகினில் செல்ல
பூஞ்சாரல்
பொய்த்துப்  போனது
கானல் நீராக ...


ஒளிகற்றை ஒன்று
சூரியன் எனக் கண்டு
பகல் புலர
இருள் சூழ்ந்தது
கரிய நிழல் விழுங்க

மொட்டொன்று அவிழ
பூவெனக்கண்டு
மகரந்தம் தேடி
வண்டென மயங்கி
உயிர் மாய்த்ததென்ன ?


ஒன்றை
தொலைத்துத்தேடி
தேடித்தொலைத்து
கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன ?


Posted by shammi's blog at 12:21 AM 5 comments
Labels: திண்ணை

Monday, February 21, 2011

தனித்துப் போன மழை நாள்



நீயே இருந்து  இருக்கிறாய் 
வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் 
தாக்கத்திற்கான பின்னணியில் 
சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு  
நீயே வியாபித்திருந்தது 
என் அனைத்திலுமாக

இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள்
இருந்தும் காந்த விசை கொண்டு இழுத்திடும்
அவைகளின் நேர்த்தி 
  
மௌனங்கள் போர்வைகளாகின்றனதான் 
நினைக்கவே மனம் சோர்கிறது 
'நாம் பிரிந்து விடலாம்' என உரைத்து
 தனித்து நடந்தாய் குடை விரித்து
 
மீளவுமோர் மழை நாளில்
யாருமற்ற வீதியில் நடக்கிறேன்
பத்திரங்களில் கையெழுத்திட்ட கையோடு
என் கண்ணீருக்கு இணையாக 
மழையும் அழுவதை அறியாயா என்ன ?

Posted by shammi's blog at 5:37 AM 8 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்

Tuesday, February 15, 2011

வாழ்க்கை



 

தேடிக் கலைத்து
மரமொன்றில் தலை சாய்த்து 
இளைப்பாறுகையில்....
மரக்கிளையில் தொக்கி நின்ற 
பழுத்த இலையொன்று
துணையாக அருகில்...
வழி பறித்த பாதைகள் கொண்டு ...
எங்கேயோ இருந்து விழுந்த தேனின் சுவை 
உவர்ப்பு கொண்டு ....
 கண்ணீர் கலந்து இருக்குமோ ?
சிக்கல்கள் விடுவிக்க படாமல் 
சிலந்தி தன் வலையை 
கருத்தாய்ப்பின்னி கொண்டு....

Posted by shammi's blog at 7:47 AM 3 comments
Labels: odagam

Monday, February 14, 2011

ஸ்பரிசம்






வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும்
தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ...

முதல் துளி ஸ்பரிசம் 
உள்வாங்கிய  பூமியும் 
 இசைக்க மறந்த பாடல்களுமாய்
கொஞ்சம் சிலிர்க்க ...
உயிர்ப்பை தொலைத்திருந்த 
விதை ஒன்றும் துளிர் விட்டது ..
முதல் அரும்பு வெளிவர 
காதல் மழை அதை நனைத்தது 

Posted by shammi's blog at 3:32 AM 3 comments
Labels: திண்ணை

Monday, February 7, 2011

சத்தமில்லா பூகம்பம்


மமதையின் மடிப்புகளில் 
உட்சொருகிய எண்ணங்கள்
முன் பின்னிழுத்தன 

தேக்கியது
உரையாடலில் வீரியம்
வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி 
பகுதிகளாய் பிரித்து 
நிறம் சேர்த்துக் கோர்த்தது

நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச்  சிலவும் 
அமிலம் தோய்த்து  பச்சையாய்ச் சிலவும்

அழகாய் மிளிர்ந்தன 
இனிப்புப் பூச்சுக்கள் அலங்கரித்திட 

நாவின் நாண் பூட்டி ஏவப்பட 
நரம்பு வழி சென்று 
இதயம் தைத்திடும்
ஆயுதங்கள் இவை 

நிகழ்ந்ததோர் சத்தமில்லா 
பூகம்பம் 
Posted by shammi's blog at 8:17 AM 6 comments
Labels: திண்ணை

அவள் அப்படித்தான்




சேகரித்து வைத்துக் கொண்டு
       அமர்ந்திருந்தாள் தெருவோரமாய்
    சிதறிப் போன ஞாபக நட்சத்திரங்களை 

   
        கடை விரித்தாள்
        இருந்தன அமைதியாய்ச் சிலவும்
    இங்கும் அங்கும் பறப்பனவாயும் ...
  
        ஒன்றையெடுத்துத் தனக்கென வைத்தவள்
    தேர்ந்த வியாபாரி போலச் செயல்பட்டதில்
    சாயம் போன, உதிரிக் கனவுகள் கூட விலை போயின
  
        இருள் சூழ்ந்த வேளையொன்றில்
        மேகப் பொதியிலிருந்து நேராக இறங்கிய ஒருவன்
    மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறே
         தனக்கென இவள் ஒதுக்கி வைத்திருந்ததைக் கேட்டான்

  
    அனைத்தையும் கொடுத்தாள்
    விலையேதுமில்லாமலே
    அவளிடத்து வாங்கிய பொருள் கொண்டவன்
    அந்தகாரத்துக்குள்ளே மறைந்தே போனான்
  
    மறு தினம் மீண்டும் கடை விரித்தாள்
         தன் அழகிய விழிகளால்
    ஆழமாய்ப் பார்த்தவாறே

    நேற்றைய ஞாபகங்களை 
    இன்றைய விற்பனைப் பொருட்களாக்கி
Posted by shammi's blog at 8:15 AM 0 comments
Labels: காட்சி

வியூகம்



ஓர் சிறு புள்ளி
ஒன்றன் பின் ஒன்றாய்
சுற்றிலும் அதிர் வலைகளின் 
பின்னூட்டங்களில்
அடுக்குகளை தாங்கியே 
சக்கரவியூகம் , அங்கே 
எய்த கல் வட்டங்களை வாரி இறைக்க 
பயந்து பின் ...கேலி பூக்க நின்று நகைத்தன
சிதறியோடிய மீன்கள் ...
உள்ளோடிய கல் எங்கோ சென்று மறைய 
படிகம் ஒன்று பாசி படியத்துவங்கியது ......

Posted by shammi's blog at 8:12 AM 2 comments
Labels: கீற்று

Wednesday, February 2, 2011

வெற்றுத்தாள்கள்




எழுத்துக்கள் தவிர்த்த வார்த்தை என்பது
 எழுதப்படாத கவிதையாக 
சொல்லப்படாத காதலாக 
வரையப்படாத ஓவியமாக  
கிறுக்கல்களாக ....
வெற்று கோடுகளாக 
சில சமயம் வெளியிடப்படாத  உணர்வாக 
தற்கொலை குறிப்பு எழுத எடுத்த 
வெற்றுக்காகிதத்தின் கசங்கல் களாகவும் 
இருந்து இறந்துவிடுவதாக 
அமைந்து விடுவதுமுண்டு ....

Posted by shammi's blog at 1:12 AM 6 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ▼  February (8)
      • எதோவொன்று
      • தனித்துப் போன மழை நாள்
      • வாழ்க்கை
      • ஸ்பரிசம்
      • சத்தமில்லா பூகம்பம்
      • அவள் அப்படித்தான்
      • வியூகம்
      • வெற்றுத்தாள்கள்
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio