skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Monday, January 10, 2011

கரையில்லா ஓடங்கள்




கனவுகள் தோரணம் கட்டி
இமைகளில்  இறுகப்பூட்டி
விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட 
ஆங்காங்கே  அவள் அமர்ந்திருப்பாள்

சிறுவயதுக்கனவொன்று 
அவளை இரவுபகலாக வாட்ட
விழி முத்துக்கள் கடலாகின 
உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள் 
நீந்தி கொண்டு எட்டி பார்த்தது 

மலை எனவும் மடு எனவும் 
இலட்சியங்கள், நம்பிக்கைகள்  வகை பிரித்தாள்
நிலந்தனில் படர விட்டால் 
மிதிபடும் என 
ஆழ்கடலில் புதைத்து வைக்கிறாள் 

கனவுக்காலம் வரும் பொழுது 
மீட்டு கொள்ளவென ....
காலம் என்றும்
 அவள் கனவுகளில் மட்டும் தான்
எப்படி  அவள் மறந்தாள்? 
 அவள் ஓடங்களுக்கு தான்  கரைகள் இல்லையே  .... 

Posted by shammi's blog at 7:52 AM
Labels: திண்ணை

2 comments:

Nagasubramanian said...

// அவள் ஓடங்களுக்கு தான் கரைகள் இல்லையே//
fantastic

January 10, 2011 at 8:28 PM
சின்னப்பயல் said...

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்.?

January 11, 2011 at 10:14 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ▼  January (5)
      • கடற்கரை காதல்
      • தொலைந்த நான் ...
      • ஓர் குரல்
      • கரையில்லா ஓடங்கள்
      • சாயல்கள்
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio