skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, January 2, 2011

சாயல்கள்


வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன
தடங்கலின்றிப்  பேசவோ ,
எழுதவோ நினைக்கையில் 
அவை சிக்குவதேயில்லை ....
ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும் 
வார்த்தைகளைச்  சரிவர கோர்க்க 
என்றுமே  இயல்வதில்லை  ....
மீறி எத்தனிக்கையில் அவை 
ஓவியப் பலகையில் 
கோடுகளாகவோ அல்லது
வர்ண தெளிப்புகளாகவோ 
வெறும்சாயல்கள் மட்டும் தாங்கியே 
நின்று விடுகின்றன ...

Posted by shammi's blog at 7:05 PM
Labels: திண்ணை

6 comments:

தாராபுரத்தான் said...

உண்மைதான்...என்னைப்போன்றவர்களுக்கு.

January 3, 2011 at 4:56 PM
cheena (சீனா) said...

உண்மை உண்மை ஷம்மி - பழகப் பழக நமக்கு சொற்கள் அடிமையாகி விடும். கவலை வேண்டாம் - கவிதை மழை பொழிபவருக்கு பேச்த் தயக்கமா ? நல்வாழ்த்துகள் ஷம்மி - நட்புடன் சீனா

January 4, 2011 at 4:14 PM
Speed Master said...

அருமை
ஓட்டு பட்டையை கீழே வைக்கவும்
படங்களை சிறிதாக ஒட்டவும் மிகவும் நேரம் எடுத்துக்கொள்கிறது
--------------


இடுகைக்குக் கீழே வரும்படி அமைக்க:

இவ்வரிக்குப் பின் தமிழ்மணம் நிரல்துண்டு வருமாறு அமைக்கவேண்டும்.

January 5, 2011 at 2:22 AM
கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

superb one ! Congrats..

January 6, 2011 at 6:25 AM
அன்பேசிவம் said...

ஹாய், இப்போதுதான் உங்கள் தளத்தை முழுமையாக பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்.
சில நேரங்களில் இப்படி தொக்கி நிற்கும் வார்த்தைகளின் அழகு, அது முழுமயடையும்போதிருப்பதில்லை. கவிதை நன்று.

January 9, 2011 at 7:30 AM
Yaathoramani.blogspot.com said...

இக்கவிதை ஓவியப் பலகையில்
ஓவியமாகத்தான் பளிச்சிடுகிறது
வாழ்த்துக்கள்

January 17, 2011 at 8:53 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ▼  January (5)
      • கடற்கரை காதல்
      • தொலைந்த நான் ...
      • ஓர் குரல்
      • கரையில்லா ஓடங்கள்
      • சாயல்கள்
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio