
எப்போதும் கேட்டுக் கொண்டே
இருக்கிறதோர் குரல்
இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன்
ஆங்காரக் கூச்சலிடுகின்றன
நடு நிசிவெளியில்
ஓலங்களென...
விழித்துப் பார்க்கையில்
குப்பைத் தொட்டியைப்
பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
ஒற்றை வீதியின்
கடைசியில் ஒரு வாங்கில் (பெஞ்சில் )
அந்த குரலுடன் விவாதித்தபடியே
சற்றைக்கெல்லாம் பைத்தியமென
பட்டம் கிடைத்தபொழுதும்
அந்தக் குரல் ஓய்வதாயில்லை
கடைசி கடைசியெனவோர் சவப்பெட்டியில்
அடைந்த பொழுது மட்டுமந்தக் குரல்
மட்டுப்பட்டு தேய்ந்து போனது
என்னுடன் வரக்கூடுமோ
மறுபிறப்பிலும் அக் குரல் மீண்டும் ?
3 comments:
மிக மிக அருமை.
மிகவும் அருமை சம்மி..
என்னுடன் வரக்கூடுமோ
மறுபிறப்பிலும் அக் குரல் மீண்டும் ?
பயமுறுத்துகிறது இறுதி வரிகள் ...!!!
Post a Comment