உள்ளில் புதைந்து இருக்கும் உனைக்
கடைந்தேற்றல் இயலாததாகவே
இருந்து வருகிறது ..காரணியாய்
வினவுகள் மட்டுமே ...
உதிர்வித்த நினைவுகளின்
இழைகள் பிடித்து
வலை பின்னுகிறாய்
அம்மெல்லிய ஞாபகங்களை
அதீதம் கோர்த்தே இறுக்குகிறாய் ....
ஸ்படிக பள்ளத்தாக்குகளில் ஆழ்ந்து இறங்கி
பழம் பாசி படர்ந்த மூலைகளில்
கூர்மமாய் அவைகளைக் கொத்தி
புசிக்க ஆரம்பித்தாய் ...
கருமை படர்ந்த வெளிகளில்
உனைக் கரைத்து எடுத்துச் செல்கையில்
வெளிச்சம் தேடி நடந்த கால்கள்
பின்னோடு இருளையும்
இழுத்துச் செல்ல தலைப்பட்டன
இருக்கட்டும் இனி
இதுவே கடைசியென....
2 comments:
கவிதை நன்று.
mikka nandri...:)))
Post a Comment