இருளின் நீட்சிப்பாதையில்
மிச்சம் இருந்தது
இமைகளின் உறக்கம்...
தொடக்கங்களில் பிரியமாய் இருந்த
கனவுகள் தொடர்ச்சியில்
கொஞ்சம் மருட்டுகின்றன
ஒ... இந்த கனவுகள்...
மீட்சி அற்ற பள்ளத்தாக்கின்
இருள் நிறைந்த பாதையில்
என்னை கொண்டு நிறுத்துகின்றன...
யாரும் அற்ற வேளைகளில்
கேள்விகள் தோன்றின
வினவுகளின் தொடர்பில்
ஓர் உரு மெல்ல உதித்தது
மனித சாயலா? மிருக சாயலா?
புலப்படவில்லை....
கடைவாய்
வழிந்தோடும் ரத்த வாடையோடு
என்னை புசிக்க அருகில் வர
வீறிட்டு அலறி கொண்டிருந்தேன்
யாரும் அற்று...
அறையில் ஓர் செந்நிற விளக்கு
ஒளி பாய்ச்சிய படி இருந்தது....
மிச்சம் இருந்தது
இமைகளின் உறக்கம்...
தொடக்கங்களில் பிரியமாய் இருந்த
கனவுகள் தொடர்ச்சியில்
கொஞ்சம் மருட்டுகின்றன
ஒ... இந்த கனவுகள்...
மீட்சி அற்ற பள்ளத்தாக்கின்
இருள் நிறைந்த பாதையில்
என்னை கொண்டு நிறுத்துகின்றன...
யாரும் அற்ற வேளைகளில்
கேள்விகள் தோன்றின
வினவுகளின் தொடர்பில்
ஓர் உரு மெல்ல உதித்தது
மனித சாயலா? மிருக சாயலா?
புலப்படவில்லை....
கடைவாய்
வழிந்தோடும் ரத்த வாடையோடு
என்னை புசிக்க அருகில் வர
வீறிட்டு அலறி கொண்டிருந்தேன்
யாரும் அற்று...
அறையில் ஓர் செந்நிற விளக்கு
ஒளி பாய்ச்சிய படி இருந்தது....
2 comments:
அருமையும் ஆழமும் நிறைந்த வரிகள் நன்றீங்க..
VERY NICE......
Post a Comment