skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, May 29, 2011

இருள் போர்வையின் முடுச்சுக்கள்

இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி
சிக்கலாகுகையில்
சுவாசமோர் விசையில்
மென்காற்றாகவோ புயல்மழையாகவோ
ஏன் பெருமூச்சாகவும்
இருத்தல் கூடும் .

ஒரு கயிற்றின் வழியில்
இரு முனைகளாக வழிந்தோடுமவை
வெவ்வேறு கோணங்கள் தீண்டி
ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட
இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக
மீளவும் சிக்கல்கள்
பிரிக்கப்படாமல்
அவள்
மற்றும்
அவன் ….

http://puthu.thinnai.com/?p=635
Posted by shammi's blog at 8:12 PM 0 comments
Labels: திண்ணை

தக திமி தா


பொய்மைகள் திரை கட்டி
உடல் மறைத்த கூடு
சட்டமிட்ட மனமெனும்
பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம்
ஊழித்தாண்டவம்
தீப்பொறி கிளப்ப
உணர்வுகள் கொண்டு தீட்டிய
கூரிய போர்வாள்
சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட
இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும்
காயங்கள் வெளித் தெரியாதிருக்க
உலர்ந்து வறண்ட உதடுகளில்
புன்னகை சாயம்
அதிலும் தெறிக்கும் சிவப்பாய்
குருதி வர்ணம்
அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட
சாம்பலானது பிண்டமெனும்
மெய்
http://puthu.thinnai.com/?p=639


Posted by shammi's blog at 8:01 PM 0 comments
Labels: திண்ணை

Wednesday, May 25, 2011

கருமையின் படிமானம்


இலைகளின் நுனியோர பனித்துளி 
உணர்ந்தே ஒளி வீச
ஒரு கீற்று எழுப்பும் ஒளிகளினுடே
இருளின் கருமை படிந்தே  இருக்கும் 

மேகக் கூடத்தில் வெள்ளையாய் 
முயல், கரடி என உருவகங்கள் செய்து
தன்னிச்சையாய் செயற்படும் 
ஒன்றுமற்ற வெற்று வெளியில் 
கருமை சூழ வெறித்து இருக்கும் 
பார்வை 

காகிதக் கூழ் பதுமையாய் 
ஒட்டலின்றி விலகி 
தனித்து நின்றாடுதோர் 
தலையாட்டி பொம்மை 
அச்சுக் கருமை விலகாமல் 

http://kaattchi.blogspot.com/2011/05/blog-post_26.html
Posted by shammi's blog at 11:03 PM 1 comments
Labels: காட்சி

Sunday, May 22, 2011

தொடரும் கவிதைகள்



நீ விலகி செல்லும் போது  
காகிதத்தில் 
பதிந்தது சிவப்பு வர்ணத்தில் 
எழுதிய கவிதை ஒன்று 
ரத்தம் அதன் நிறமா அல்லது 
உணர்வா என பிரித்து கூற  இயலாது ...

எனதான உன் காலங்களில் 
இளவேனில் அதிகம் இருந்தது 
எங்கிலும் பசுமை நிறைந்தால் 
புனையப்பட்டவை 
இளம் பச்சை நிறம் கோர்த்து இருந்தன

மயங்கும் மாலையில் 
கடலோரம் பேசிய முத்துக்கள் 
கூட இளமஞ்சள் சேர்த்து விழுந்தன ..

 கோபம் கொண்ட கணங்கள் 
கருமை புசியதாகவும் 
கடும் குளிரின் தாக்கம் ௯ட்டுபவை 
அனைத்திலும் தனித்து தெரிபவை 
குரோதம்  கொப்பளிக்கும் வார்த்தைகள் 

அமைதியை நிலைநாட்ட 
புறப்பட்ட கவிதைகள் 
வெள்ளை நிறம் அல்லால்
 வேறு என்ன இருக்க முடியும் ?

வார்த்தைகளில் வர்ணஜால
 கவிதை வடிக்கும் நீ
 மற்றும் ஒரு வண்ணம் தேடி கவிதை செதுக்ககூடும் 
அது  கருமை தேடும் 
 ஒரு இறங்கர்பாவாக இருக்க வேண்டாம் ...

Posted by shammi's blog at 3:58 AM 5 comments

Monday, May 16, 2011

சிதறல்



தேடுதல் எளிதாக இல்லை
தொலைத்த நானும்
தொலைந்து போன நீயும்
தனித் தனியாக தேடும் பொழுது


எட்டநின்று பார்த்தது
காதல் ....

களித்த காலம் கழிந்து போனதில்
எச்ச விகுதிகளில் தொக்கி
நிற்கிறது
 காலம்
மற்றும்
நான்....


தூர்ந்து போன கனவுகள்
இன்று
சக்கரை பூச்சுடன்


தொலைந்து போன புன்னகை
உதட்டளவில் பூக்கின்றது

சிதறிப் போன கண்ணாடி கனவுகளில்
யாருக்கும் காயம் இல்லை
உடலளவில் ....


Posted by shammi's blog at 3:14 AM 6 comments
Labels: திண்ணை

Monday, May 9, 2011

மரணத்தின் தூதுவன்




அந்த குளக்கரையில் நின்றிருந்த
ஒற்றை நாரையின்
அலகுகளில் காத்து இருக்கின்றான்


எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி
கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே
துள்ளிக் கொண்டு திரிகிறது
ஓர் மீன் கூட்டம்...



காற்றின் கடும் தாக்கம் கண்டு
ஒளிந்து இருக்கும் தாய் பறவையின்
கண்களின் தவிப்பு
இடிக்கு பற்றி எரியும் மரத்தைப்
பார்க்கும் போது ....

மழையின் அடர் இருட்டில்
ஒடுங்கியபடி அமர்ந்து இருக்கும்
தோல் வற்றிப் போன கிழவனின்
அருகே நிற்கும்
கூரையற்ற குட்டிச்சுவர் ...

Posted by shammi's blog at 7:40 AM 5 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ▼  May (6)
      • இருள் போர்வையின் முடுச்சுக்கள்
      • தக திமி தா
      • கருமையின் படிமானம்
      • தொடரும் கவிதைகள்
      • சிதறல்
      • மரணத்தின் தூதுவன்
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio