skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, January 30, 2011

கடற்கரை காதல்



நிலவும் கடலும்
சங்கமித்ததில்
பிறந்து சிரித்தது
வெள்ளிச் சதங்கையென
கடலலைகள் .....

உன் பாதச் சுவடுகளில்
நான் தடம் பதிக்க
நிகழ்ந்தது அக்கினியற்ற
ஹோம வலம்.......

கரைசேரும்
காதல் கட்டுமரம்
என் கனவுகளோடு ......
வாழ்த்தின அலைகள்
வேகமாய் ஒன்றன் பின் ஒன்றாய்.......

உருவம் இல்லாதபடி
நம் காதலும் ,,,,,,,
நுரை தப்பியபடி ......
தனித்து அறியப்படாமல் ........

வலைகளில் சிக்காத மீன்களாய்
ஆழ்கடலில் முத்தெடுப்போம்
என்றும் இணைந்தபடி.....
பிரிவிலும் கூட ,,,,,,,



Posted by shammi's blog at 7:43 PM 5 comments
Labels: திண்ணை

Monday, January 24, 2011

தொலைந்த நான் ...


தொலைத்த என்னைத் தேடிட
அவகாசம் கிட்டவேயில்லை
தொடர்ந்தும் பறக்கிறது காலச் சிறகு

சிற்சில சொல்லாடல்களில்
காணாமல் போன எனதான சாயல்கள்
ஏந்தி  நிற்கும் எதுவுமே
என் போன்றே  தெரிந்திட
அருகில் சென்று ஆராயத் தோன்றும்படி
மனம் ஆர்பாட்டக் ௯ச்சலிடும்

சீ ... நானல்ல இது என  உடன்  சலிக்கும்
வருடங்கள் கடக்கின்றன
தாத்பரியம் என்னவென்று புரியாமல்
வாழ்வியல் கற்றுத் தரா பாடங்கள்

உள்ளுக்குள் தேடல் தீண்ட
தோன்றி விழத் துவங்கின
சுயம் 
கண்ணாடிக் ௯ண்டுக்குள்
கற்களாகி......

Posted by shammi's blog at 5:35 AM 3 comments
Labels: திண்ணை

Monday, January 17, 2011

ஓர் குரல்


எப்போதும் கேட்டுக் கொண்டே
இருக்கிறதோர் குரல்
இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன்
ஆங்காரக் கூச்சலிடுகின்றன
நடு நிசிவெளியில்
ஓலங்களென...
விழித்துப் பார்க்கையில்
குப்பைத் தொட்டியைப்
பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
ஒற்றை வீதியின்
கடைசியில் ஒரு வாங்கில் (பெஞ்சில் )
அந்த குரலுடன் விவாதித்தபடியே
சற்றைக்கெல்லாம் பைத்தியமென
பட்டம் கிடைத்தபொழுதும்
அந்தக் குரல் ஓய்வதாயில்லை
கடைசி கடைசியெனவோர் சவப்பெட்டியில்
அடைந்த பொழுது மட்டுமந்தக் குரல்
மட்டுப்பட்டு தேய்ந்து போனது
என்னுடன் வரக்கூடுமோ
மறுபிறப்பிலும் அக் குரல் மீண்டும் ?

Posted by shammi's blog at 8:34 PM 3 comments
Labels: திண்ணை

Monday, January 10, 2011

கரையில்லா ஓடங்கள்




கனவுகள் தோரணம் கட்டி
இமைகளில்  இறுகப்பூட்டி
விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட 
ஆங்காங்கே  அவள் அமர்ந்திருப்பாள்

சிறுவயதுக்கனவொன்று 
அவளை இரவுபகலாக வாட்ட
விழி முத்துக்கள் கடலாகின 
உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள் 
நீந்தி கொண்டு எட்டி பார்த்தது 

மலை எனவும் மடு எனவும் 
இலட்சியங்கள், நம்பிக்கைகள்  வகை பிரித்தாள்
நிலந்தனில் படர விட்டால் 
மிதிபடும் என 
ஆழ்கடலில் புதைத்து வைக்கிறாள் 

கனவுக்காலம் வரும் பொழுது 
மீட்டு கொள்ளவென ....
காலம் என்றும்
 அவள் கனவுகளில் மட்டும் தான்
எப்படி  அவள் மறந்தாள்? 
 அவள் ஓடங்களுக்கு தான்  கரைகள் இல்லையே  .... 

Posted by shammi's blog at 7:52 AM 2 comments
Labels: திண்ணை

Sunday, January 2, 2011

சாயல்கள்


வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன
தடங்கலின்றிப்  பேசவோ ,
எழுதவோ நினைக்கையில் 
அவை சிக்குவதேயில்லை ....
ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும் 
வார்த்தைகளைச்  சரிவர கோர்க்க 
என்றுமே  இயல்வதில்லை  ....
மீறி எத்தனிக்கையில் அவை 
ஓவியப் பலகையில் 
கோடுகளாகவோ அல்லது
வர்ண தெளிப்புகளாகவோ 
வெறும்சாயல்கள் மட்டும் தாங்கியே 
நின்று விடுகின்றன ...

Posted by shammi's blog at 7:05 PM 6 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ▼  January (5)
      • கடற்கரை காதல்
      • தொலைந்த நான் ...
      • ஓர் குரல்
      • கரையில்லா ஓடங்கள்
      • சாயல்கள்
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio