அவனற்ற வெளிகளில்
அமைதி குவியலாக
சேமித்து வைக்கப்படுகிறது
அனுமதியற்ற சப்தங்கள்
கைஅசைத்து
அழைக்கின்றன,
மறுதலிக்கவே
தோன்றாமல்
யாருமற்ற நேரங்களில்
அவைகளுடன் சேர்ந்து
புழை தண்ணீரில்
கால்களை நீந்தவிடுகிறேன்
வன்மம் கொண்ட யட்சன்
காத்து இருந்து
தாமரை தண்டுகளால்
வலைபின்னுகிறான்
அகலிகையாய் மாறுகிறேன்
அவனின் இரைச்சல் இன்னும்
இன்னும் என
சாபங்களை கூட்டிக்கொண்டே
இருக்கிறது ...
விநோதங்களை
நிகழ்த்தி கொண்டே
இருக்கிறது ....
அந்த யாருமற்ற இடமும்
கல்லாகி போன நானும்
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5917
1 comments:
அற்புதம்.
உங்களிடம் அருமையான எழுத்தாற்றல் இருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
Post a Comment