தேக்கிவைத்த
நினைவுச்சுருள்கள் கொஞ்சம் பிரிந்து அவிழ்ந்து போனதில்
சிதறி விழுகிறார்கள்
அவன்
மற்றுமோர் அவள் ....
சிக்கல்கள் பிரிக்க
சிக்கிக்கொண்டனள் .
ஓர் இழை பிரிந்து
இரு முனைகளில்
அவன்
மற்றும்
அவனின் அவள் ....
கோர்த்துக்கொண்டே வந்தவள் மாலையின்
அடியில் நிற்கிறது ஓர் கேள்விகுறி
அடியில் அமைதியாய் ஓர்
முற்றுப்புள்ளியும் ....
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4898
2 comments:
கோர்த்துக்கொண்டே வந்தவள் மாலையின்
அடியில் நிற்கிறது ஓர் கேள்விகுறி
அடியில் அமைதியாய் ஓர்
முற்றுப்புள்ளியும் /
அருமையான பகிர்வு.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
nandri rajarajeswari thangalukkum deepathirunaal vazhthukkal
Post a Comment