யன்னல்கள் ஏதுமற்றிருந்த
அந்த ஒற்றையறையின் கதவுகள் சாத்தப்பட்டே இருந்தன
எப்போதும் அலறல்களும்
கூச்சல்களும் அங்கே
கசிய விடப்பட்டிருக்கும்
ஒலித்துகள்கள் ஒவ்வொரு
அணுவிலும் ஏற்றப்பட்ட
உடல் அதிரத்துவங்கும்
மௌனமான நேரங்களில் கூட
செவிகளில் ரீங்காரமிடும்
அந்த அழுகையின் ஒலி
அந்த அழுகையின் ஒலி
அவளிலிருந்து
அந்த அறைக்கு
விடுதலை தந்தது
ஒர் மரணம்மீண்டும் பூட்டப்பட்ட
அந்த அறைக்குள்
அவள் தனித்து
கூச்சல்களும் அலறல்களும்
அழுகைகளும்
மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் ..
http://puthu.thinnai.com/?p=3239
10 comments:
வேதனையான கவிதை.
இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/08/5.html
மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில்
கனக்கிறது மனம்.
//மௌனமான நேரங்களில் கூட
செவிகளில் ரீங்காரமிடும்
அந்த அழுகையின் ஒலி//
கவிதையில் மன உளைச்சலின் வலி.... கவிதை கலக்கலாக இருக்கிறது வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
@ratnavel....yes...
@indira...thanks a lot..
@maya ulagam... thanks ..:-)...
omg...jst nw i read dis..the way u presenting this poem is concurrencing mine which i have posted recently..anyway...
urs very very nice..keep going with bests ..:)
thanks hemi , ya i read yours ...
U r a inspiration to us women at home thinking why this happened to me wat did i do wrong....instead of gettin down n makin it happen....thank u so much...continue d gud work best wishes.
Thanks a lot sasi rekha....
Post a Comment