skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Saturday, April 30, 2011

நேற்றையும் நாளையும்




அறை முழுதும்
நிரம்பிக் கொண்டு இருந்தது
ஞாபகக் குப்பை
இழுத்த மூச்சு வழியே
புழுதிகள் நிரப்பி
நுரை ஈரல் நசுக்கியது ,
சிதறிக்கிடந்த காகிதங்களில்
எழுதிய கிறுக்கல்களை விட
எழுதாதவைகள் அதிகம்
சுமந்து இருந்தன ...
உள்ளிழுத்த கண்ணீர்க் கோடுகள்
நேற்றற்ற
நாளையையும் இன்றையும்
சுமந்து கொண்டு இருக்கின்றன


Posted by shammi's blog at 9:55 PM 0 comments
Labels: உயிரோசை, திண்ணை

அது

கடத்தப்பட்ட நிமிடங்களுள் 
அது ஒளிந்திருந்தது...
நிகழ்வுகளின் ஓர் அங்கமென இருந்தும் 
ஓங்காரக் கூச்சலிடுகிறது 
தவறிவிட்ட சந்தர்பங்களுக்காக ஏங்கி
தவிக்கிறது அது 
படிமங்களுள் படிமானமாக
பாசி பூத்து உள்ளுக்குள்ளே 
மரணிக்கிறது ...
கல்லறை சுவாசமென
மரணித்தவனின் கையில் இருக்கிறது அது ...
அமைதியென ..
Posted by shammi's blog at 8:13 AM 2 comments
Labels: வல்லினம்

Wednesday, April 27, 2011

பகடை



சிக்கல்கள் பிரித்து எடுக்கப்பட்ட உறவுகளுடன்
சதுரங்கம் புதிதாய் !
பகடைகள் உருட்டப்பட
தோல்விக்கான பயணம்
சூசகமாய் துவங்குகிறது......

64 கட்டங்களுக்கும் ஓர் அவதாரமென
சூழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும்
குதிரையும் யானையுமாய் ...

காவல்கள் வலுப்பட்ட அரணுக்குள்
பத்திரமாய் அரசனும் அரசியும்
போர் சூத்திரங்கள் மாற்றப்பட
நிசப்த வெளிகளில் இடைபுகுந்த
வெள்ளை தாயாதிகளால்
தோற்கடிக்க படுகின்றார்
கருப்பு ராஜாவும் ராணியும் ....



Posted by shammi's blog at 9:44 AM 4 comments
Labels: திண்ணை

Sunday, April 17, 2011

ஓர் பரி ....


சதுரித்த நிலமொன்றில்
நின்றிருந்தது....
அப்புரவி ...
அழகாய் கண்களை விழித்து
உலகை வெறித்து பார்த்துக்கொண்டு

முழுதும் நகைகளை பூட்டி
கடிவாளங்களுக்கு மத்தியிலும்
சிரித்து..
பற்களை மட்டும் காண்பித்து

ஏனோ?
கனைப்பு சப்தம் மட்டும்
கேட்பதாய் இல்லை ...


பின்னங்கால்களை மெல்ல உயர்த்தி
ஓட பார்த்ததோ?
தளைப்பூட்டிய கால்கள்
பூமிக்குள் வேரோடிப்போய் ....

உயிர்ப்பை தொலைத்து
வான்நோக்கி உயர்ந்து
நின்றது
அந்த வெங்கலப்புரவி ..
சுமார் 15 அடி உயரத்தில் ,

அலங்காரமாய் ...
அடிமையாய் ...



Posted by shammi's blog at 9:38 PM 3 comments
Labels: திண்ணை

Sunday, April 10, 2011

பறவை , பட்டம் மற்றும் மழை


   
எங்கோ தாவி சென்ற பறவை
விட்டு சென்ற எச்ச மிச்சங்கள்
நிழல் கவிதைகளை
அள்ளி தெளித்தன


பிடிமானக் கயறு அறுத்து கொண்டு
பட்டம் , பறவைகளோடு
போரிட்டது ...                                      

காற்றின் அலைவரிசை சாரமாக
சலனங்கள் தவிர்த்து ,
ஒடுக்கப்பட வீதியில்
ஒற்றையாய் திரிந்தது ...

ஓங்கியடித்த மழையில்
வேகத்தில் முழுக்க நனைந்து
ஓரமாக கிழிந்து
நிலைகுலைந்து தரை தொட்டது
கண்ணீரைக் கழுவியது
மழைத் துளிகள் ..
Posted by shammi's blog at 7:07 PM 5 comments
Labels: திண்ணை

Saturday, April 2, 2011

நிழல் மோனம் ..



கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால்
ஓர் நிழல் யுத்தம்
இருள் போர்வையை கிழித்து
வெளியேறியது வியர்வை வடித்த நிலவு

சங்கடை வார்த்த பால்
மெல்ல உள்ளிறங்க ...
துப்பிய மிச்சமோ பால் வீதியின்
எச்ச நட்சத்திரங்கள் ?

சப்த நாடிகளுள் சூழ் கொண்டு
எரித்த ..இவ்வேளையில்
துயில் கொண்டது அவளின் மௌன மோனம் ...


Posted by shammi's blog at 9:16 PM 2 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ▼  April (6)
      • நேற்றையும் நாளையும்
      • அது
      • பகடை
      • ஓர் பரி ....
      • பறவை , பட்டம் மற்றும் மழை
      • நிழல் மோனம் ..
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio