skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, December 19, 2010

மௌனம்


மனதோடு மௌனம்
பழக்கிப்பார்க்கிறேன்
இருந்தும் முரண்டியது
மரணக்கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில்
தப்பித் தெறிக்கும்
ஓசை , ..சொல்லாமல்
மௌனம் கலைக்கும்

சுயம் அடிபடும் வேளைகளில்
ரௌத்தரம் பழகவில்லை
நான் ...
மௌனம் பழக்கிக்கொள்கிறேன்

வெளியிட விரும்பா வார்த்தைகளை
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்
ஓசைகள்
ஓங்கி ஒலிக்கும் நேரம்
என் மௌனங்கள் அவற்றை
இரை கொள்ளும் .....
எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகள்
என அனைத்து முயற்சிகளுக்கும்
மௌனமே உரையானது ...

இனி உன் வார்த்தைகளை
நீயே புசி..
அவற்றின் மரணக்கூச்சல்கள்
துணை கொண்டு ....
நான் மௌனப் போர்வையில்
குளிர் காய்கிறேன் ....

Posted by shammi's blog at 10:12 PM
Labels: திண்ணை

5 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Nice ! Congrats..

December 20, 2010 at 6:09 AM
Nagasubramanian said...

superb shammi

December 21, 2010 at 1:53 AM
shammi's blog said...

thanks kanakadhalan
thanks naga...

December 26, 2010 at 5:26 AM
தாராபுரத்தான் said...

அன்பு மகளே.. நேற்று உன் முகம் பார்த்தேன். இன்று உன்எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகளைப் பார்க்கிறேன். தொடர்ந்து வருவேன்.மாமாவை அறிமுக படுத்தாமல் சென்று விட்டாய்..பரவாயில்லை ..கேட்டதாக கூறவும்.

December 26, 2010 at 3:35 PM
ப.கந்தசாமி said...

Shammi,
என் பதிவில் உங்களுடைய பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். உங்கள் கவிதைகளை இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. பார்க்கிறேன்.

நேற்றைய பதிவர் சந்திப்பில் நான் எடுத்த படங்களை என் பிளாக்கில் போட்டிருக்கிறேன். நேரம் இருக்கும்போது பார்க்கவும்.

December 26, 2010 at 6:00 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ▼  December (4)
      • விபரீதகரணி
      • மௌனம்
      • துடித்தலும் துவள்தலும்
      • எண்ணப்பிழை ..
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio