skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, December 26, 2010

விபரீதகரணி



அவர்களின் தலைகளில் கால்கள்
முளைத்திருந்தன ....
இறகுகளில் சிலவற்றின் மென்மையோடு
காற்றின் திசையில் பறப்பனவாய்
மேலும் கீழும் அசைந்தபடி
வானுக்கும் பூமிக்குமான பயணம்
கழிகளின் மேல் ஒரு அனாயச நர்த்தனம்
மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
கோல்களோடும்
போரிட்டு நிலைநாட்டும் ஆர்வம்
ஆகாயத்தின் அலசல்கள் முற்றுப் பெற்று
தரை தொடுகையில்
தொடரும் கேள்விகளின்
தாக்கச் சுமை மனதை அழுத்திட
ஊமையாய் எஞ்சும் கேவல்கள் ....

Posted by shammi's blog at 10:37 PM 7 comments
Labels: திண்ணை

Sunday, December 19, 2010

மௌனம்


மனதோடு மௌனம்
பழக்கிப்பார்க்கிறேன்
இருந்தும் முரண்டியது
மரணக்கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில்
தப்பித் தெறிக்கும்
ஓசை , ..சொல்லாமல்
மௌனம் கலைக்கும்

சுயம் அடிபடும் வேளைகளில்
ரௌத்தரம் பழகவில்லை
நான் ...
மௌனம் பழக்கிக்கொள்கிறேன்

வெளியிட விரும்பா வார்த்தைகளை
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்
ஓசைகள்
ஓங்கி ஒலிக்கும் நேரம்
என் மௌனங்கள் அவற்றை
இரை கொள்ளும் .....
எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகள்
என அனைத்து முயற்சிகளுக்கும்
மௌனமே உரையானது ...

இனி உன் வார்த்தைகளை
நீயே புசி..
அவற்றின் மரணக்கூச்சல்கள்
துணை கொண்டு ....
நான் மௌனப் போர்வையில்
குளிர் காய்கிறேன் ....

Posted by shammi's blog at 10:12 PM 5 comments
Labels: திண்ணை

Monday, December 13, 2010

துடித்தலும் துவள்தலும்



எழுத்துக்களால்
இட்டு நிரப்பிட இயலாத

இடைவெளியில்
உன் பெயர் மட்டுமே
 கடவுச் சொல் .....

வெளித் தள்ளிய முத்தின் 

பேரெழிலை உணர்ந்திடாமல்
கீறல்களில் முகம் பார்த்திடும்

கிளிஞ்சல்கள்....


துடிப்பின் துள்ளல்
தெரிந்தும்,
 மீன் பிடிக்கும்
மீன்கொத்தி ....


நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும்
 அனைத்திலும் ஒருங்கே .....

நன்றி 

திண்ணை ...
Posted by shammi's blog at 7:43 AM 1 comments
Labels: திண்ணை

Sunday, December 5, 2010

எண்ணப்பிழை ..


இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது 
வக்கரித்து கொண்டன பார்வைகள் ..
நடப்பு திசை மாற
அவள் ,அவன் 
என கோணங்கள் வெவ்வேறு ஆகின 
காற்றும் புக முடியா வெளி என 
இறுகிப்  போனது  மனம் 
நூலிழை வெளிச்சம் உயிர் கரைக்க 
காற்றுடன் வழிந்தோடியது ..
ஒரு புன்னகை
 விலை? ..
அவன் காதல் ...
ஜாக்கரதை!!!
மீண்டும் ஒரு எண்ணப்பிழை ..
எளிதாய் கருத்தரிக்க கூடும் ...

நன்றி 
திண்ணை 
Posted by shammi's blog at 5:16 AM 2 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ▼  December (4)
      • விபரீதகரணி
      • மௌனம்
      • துடித்தலும் துவள்தலும்
      • எண்ணப்பிழை ..
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio