skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Friday, June 4, 2010

ஒரு ஆற்றின் மெல்லிய கதறல் ......


இரு மருங்கிலும் 
கெண்டைகள் விளையாட ....
துள்ளி குதித்து 
சிரித்து கொண்டிருந்த காலம் ......
இப்போது என் கனவுகளில் .......

பிறந்ததில்  இருந்தே 
கொடுத்தே பழக்கப்பட்ட நான் .....
எடுத்தே பழக்க பட்ட  மனிதர்கள் ....
சந்தோசமாக உதவினேன்......
பயன்படுத்த பட்டேன் .......

மனிதர்களின் புத்தியில்....
வழக்கமானகோணல்கள் ......
என் கரையோர மரங்கள் வெட்ட பட்டன ....
என் தண்ணீர் மாசுபடுத்த பட்டது .....

என் ரத்தம் அசுத்தமானது,.....
என் சேமிக்கும் பெட்டகங்கள் 
கொள்ளை போயின ....  

மணல் லாரிகளிலும்....
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றது ....
தண்ணீரல்ல......
என் கண்ணீர் ......

களைத்தும் 
கலைந்தும் நான் 
மெல்ல முனகியபடி ......

என்னுள்  எலும்புகள்  தெரிகிறது 
தயவு செய்து அதையும் டெண்டர் 
விட்டு விடாதீர்கள் ......
என் பாறைகளாவது மிஞ்சட்டும்......

உங்கள் நாளைய தலைமுறைக்கு 
ஒரு ஆற்றின் கதை(கதறல்) சொல்ல .....

நன்றி
யூத்புல் விகடன் 

Posted by shammi's blog at 9:02 AM
Labels: யூத்புல் விகடன்

4 comments:

shammi's blog said...

http://youthful.vikatan.com/youth/Nyouth/shammipoem040610.asp

June 4, 2010 at 9:03 AM
மார்கண்டேயன் said...

கதறல்களை யாரும் காது கொடுத்து கேட்டதாய் நினைவில்லை, பாரைகலாவது மிஞ்சுமா . . . அல்லது அங்கும் பலமாடி கட்டடங்கள் வந்து விடுமா ?

June 7, 2010 at 4:36 AM
Nafil said...

"காவிரியை கடக்க இனி ஓடம் தேவை இல்லை ஒட்டகம் போதும்" என்று ஒரு ஹைக்கூ கவிஞன் சொன்னது நாபகம் varudhu...


மணல் லாரிகளிலும்....
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றது ....
தண்ணீரல்ல......
என் கண்ணீர் ......
awesome touch,,,

June 28, 2010 at 1:26 AM
shammi's blog said...

thanks nafil

June 28, 2010 at 10:27 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ▼  June (8)
      • நிஜங்கள் சுடுகின்றன
      • நிராதரவின் ஆசைகள்!
      • காதல்
      • ஒரு புகை(த்த)ச்சல் பயணம் .....
      • டாஸ்மாக்கும் சில 'குடி'மகன்களும்
      • நிலா ....
      • ஒரு ஆற்றின் மெல்லிய கதறல் ......
      • காதல் பார்வையாளனாய் !!!!!
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio