skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, November 11, 2012

இலையுதிர் மரங்கள்


தலைதனில் மரங்களை சுமந்தவள் 
சமதளங்களை நோக்கி 
பயணிக்க எண்ணம் கொண்டாள்


வெள்ளோட்டம் பார்க்கவென
 சிறு கரிச்சான் பறவை ஒன்றைப் பிடித்து 
செய்திகள் ஓதினாள்


வேகத்தடை ஏதும் இல்லா வெளிகள் 
கடந்த அது
பறந்தது .....
ஒரு சதுரித்த சமவெளி 
கண்டு ஆசுவாசித்து ..
தன் செய்திகளை நிலத்திடம் ஓதியது ....

இறக்கை விரித்துப் பறந்து
களைத்து,
அவளின் தலைமீது
 இலைகள் அற்ற 
மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டது


நிலம் உறிஞ்சிய செய்திகளின் 
மிச்சம் அவைகளில் குன்றுகளை
 முளைக்கச் செய்தன .....
புடைத்து எழுந்த குன்றுகள் 

வழியே மீண்டும்
 இலைகள் அற்ற
 மரங்கள் முளைக்கத் துவங்கின ...

Posted by shammi's blog at 3:31 AM
Labels: உயிரோசை

3 comments:

சீராளன்.வீ said...

நிலம் உறிஞ்சிய செய்திகளின்
மிச்சம் அவைகளில் குன்றுகளை
முளைக்கச் செய்தன .....
புடைத்து எழுந்த குன்றுகள்
வழியே மீண்டும்
இலைகள் அற்ற
மரங்கள் முளைக்கத் துவங்கின ...
........................................அழகிய கவிதைகள் ஷம்மி

December 15, 2012 at 2:42 AM
shammi's blog said...

mikka nandri seeralan :)

January 13, 2013 at 8:53 AM
Rathnavel Natarajan said...

ஆஹா. அருமை.
நீரோட்டம் போன்ற தமிழ் நடை.
வாழ்த்துகள்.

November 25, 2015 at 8:35 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ▼  2012 (14)
    • ▼  November (1)
      • இலையுதிர் மரங்கள்
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio