skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Wednesday, September 26, 2012

கனவுகள் விற்பனைக்கு அல்ல




கனவுகள்  விற்பன்னள்
அவள் ஒருத்தி ..
இருள் சூழ் பொழுதுகள்
மற்றும் அடர்வு மிகுந்த வேளை
அவளின் இரவல் நேரங்கள்

நிறைவேறா ஆவல்கள்
கூடைநிறைய எடுத்து வருகின்றாள்
அவைகளில் பொறுக்கி எடுத்து சிலவற்றை
எண்ணக் கூடைக்குள் திணிக்கிறாள் ,
கொஞ்சம்... கொஞ்சம் ...என
கனத்து போகிறது அக்கூடை ,
அவைகளின் சுமைகள் என்றுமே
இறக்கபடுவதே இல்லை ,
கூடிக்கொண்டே செல்லும் அவை
ஓர் இறுக்கமான வெற்றிடை நாழி
வழியே செலுத்தப்பட
சோதனை
கண்ணாடி கூண்டிற்குள்
மீண்டும் நிறைகிறது
ஈரோட்டா நினைவுத்தளும்பல்கள்
விருப்பமிகு தேடல்களை
இன்று வரை
அவள் விற்பதேயில்லை ,
Posted by shammi's blog at 1:04 AM 1 comments
Labels: உயிரோசை

Tuesday, September 18, 2012

வன்மம்



திணிக்கப்படும்கட்டாய மௌனத்தின்
வசத்தில் வலுவிழந்த வார்த்தைகள்
சேமித்து வைக்கப்படுகின்றன ...
என்றோ ஓர் நாள்
அவை தன் வசம் இழந்து
ஒரு வசவாகவோ, ஆக்ரோஷமாகவோ 
வெளிப்படா பட்சத்தில்...
அங்கே
ஒரு வன்மத்திற்கான
விருட்ச விதை
ஆழமாய் ஊன்றப் படுகிறது..
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5940

Posted by shammi's blog at 10:08 AM 2 comments
Labels: உயிரோசை

Tuesday, September 4, 2012

அகலிகை ....




அவனற்ற  வெளிகளில் 
அமைதி குவியலாக 
சேமித்து வைக்கப்படுகிறது 

அனுமதியற்ற சப்தங்கள் 
கைஅசைத்து 
அழைக்கின்றன,

மறுதலிக்கவே 
தோன்றாமல் 
யாருமற்ற நேரங்களில் 
அவைகளுடன் சேர்ந்து 
புழை  தண்ணீரில் 
கால்களை நீந்தவிடுகிறேன் 

வன்மம் கொண்ட யட்சன் 
காத்து இருந்து 
தாமரை தண்டுகளால் 
வலைபின்னுகிறான் 

அகலிகையாய் மாறுகிறேன் 
அவனின் இரைச்சல் இன்னும் 
இன்னும் என 
சாபங்களை கூட்டிக்கொண்டே
இருக்கிறது ...

விநோதங்களை 
 நிகழ்த்தி கொண்டே 
இருக்கிறது ....

அந்த யாருமற்ற இடமும் 
கல்லாகி  போன நானும் 
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5917

Posted by shammi's blog at 8:28 AM 1 comments
Labels: உயிரோசை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ▼  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ▼  September (3)
      • கனவுகள் விற்பனைக்கு அல்ல
      • வன்மம்
      • அகலிகை ....
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio