skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Tuesday, October 25, 2011

முக்கோணம் ...




தேக்கிவைத்த 
நினைவுச்சுருள்கள்  கொஞ்சம் 
பிரிந்து அவிழ்ந்து போனதில் 
சிதறி விழுகிறார்கள் 
அவன் 
மற்றுமோர் அவள் ....

சிக்கல்கள் பிரிக்க
சிக்கிக்கொண்டனள் .
ஓர் இழை பிரிந்து 
இரு முனைகளில் 
அவன்
 மற்றும் 
 அவனின் அவள் ....

கோர்த்துக்கொண்டே வந்தவள்  மாலையின் 
அடியில் நிற்கிறது ஓர் கேள்விகுறி
அடியில் அமைதியாய் ஓர் 
முற்றுப்புள்ளியும் ....


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4898
Posted by shammi's blog at 2:02 AM 2 comments
Labels: உயிரோசை

Saturday, October 15, 2011

சிற்சில

சிற்சில சொல்லாடல்கள்  
பிரித்து அறியப்படாமலே 
 வாதங்கள் என 
மேல்போர்வை கொண்டு 
ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன ..

மீட்சி என்னும் சொல்லறியா அவை 
தனக்குள் முடங்கி
 "தான் " விடுத்து..
தர்க்கத்தில் 
கலந்து பிணைந்து  பின்னர் 
தானாய் கரைந்தும் விடுகின்றன 

அவைகளுள் சிலவோ 
நீரினடியில் வேர் பிடித்து 
தண்டின் வழி உண்டு 
எங்காவது  மலர 
சேற்றின் அடியில் இன்னும் 
சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன 
அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை ...

http://puthu.thinnai.com/?p=4895

Posted by shammi's blog at 8:55 AM 0 comments
Labels: திண்ணை

Sunday, October 2, 2011

கனவின் எதிரொலி....

இருளின் நீட்சிப்பாதையில்
மிச்சம் இருந்தது
இமைகளின் உறக்கம்...

தொடக்கங்களில் பிரியமாய் இருந்த
கனவுகள் தொடர்ச்சியில்
கொஞ்சம் மருட்டுகின்றன

ஒ... இந்த கனவுகள்...
மீட்சி அற்ற பள்ளத்தாக்கின்
இருள் நிறைந்த பாதையில்
என்னை கொண்டு நிறுத்துகின்றன...

யாரும் அற்ற வேளைகளில்
கேள்விகள் தோன்றின
வினவுகளின் தொடர்பில்
ஓர் உரு மெல்ல உதித்தது
மனித சாயலா? மிருக சாயலா?
புலப்படவில்லை....
கடைவாய்
வழிந்தோடும் ரத்த வாடையோடு
என்னை புசிக்க அருகில் வர

வீறிட்டு அலறி கொண்டிருந்தேன்
யாரும் அற்று...
அறையில் ஓர் செந்நிற விளக்கு
ஒளி பாய்ச்சிய படி இருந்தது....
Posted by shammi's blog at 5:50 AM 2 comments
Labels: வல்லினம்
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ▼  October (3)
      • முக்கோணம் ...
      • சிற்சில
      • கனவின் எதிரொலி....
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio