skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Thursday, September 29, 2011

எங்கிலும் இருக்கும் அவன்




வழக்கொழிந்த வார்த்தைகளினூடே 
தர்க்கப்போர் துவக்குகிறான் அவன் 
சமயத்தில் அடர் ஆழம் வரை 
செங்குத்தாய் சென்று 
இருள்சூழ் பாதாளங்களிடையே 
தேங்கிக்கிடக்கின்றன அவ்வார்த்தைகள் 

செவ்வகச்சட்டம் கொண்டு
சதுரித்த முகப்புகள் கொண்டு 
சீந்துவாரற்றுத் தனித்துக் கிடக்கிறது  
சபிக்கப்பட்ட அக்கோப்பை 

பேராவல் மண்டிட கரத்தினில் எடுத்தவன் 
இதுகாறும் சேர்த்தெடுத்த இரத்தத்துளிகளை 
அவற்றில் ஊற்றுகிறான் 

அக்கோப்பைகள் நிரம்பியதும் 
எக்காளமிடுகின்றன சிவப்பாய்.
அவற்றின் கூச்சல்களும் சப்தங்களும்
எங்கோ தூர்ந்து போன ரவைகளின்
வடுக்களில் மிச்சமிருக்கும்
ரத்த நாளங்களின் வீச்சம் தாங்கியே இருந்தன

"சாத்தான் "..."ரத்தகாட்டேறி"...."பிசாசு "
எனப்பெயர்களிட்டு  அழைத்தாலும் ...
மனிதருள் மனிதராய் 
மறைந்தே இருக்கிறான் அவன் ...

"சமரசங்கள் " எனப்படும் 
சந்தர்ப்பவாதிகள் கூடம்
அவனுக்கே "ஆகுதி "..

எங்கோ தொலைவில் இருக்கும் தேவாலயத்தின் 
மணித்தியாலப் பிரார்த்தனை இனி 
" பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே ..
இப்பூலோகத்தில் இருக்கும் மனித உருக்கொண்ட ராட்சதனிடமிருந்து எம்மை காத்து இரட்சிப்பீர் "
என மட்டுமே இருக்கக்  கூடும் 

Posted by shammi's blog at 6:28 AM 1 comments
Labels: உயிரோசை

காட்சிகள்

இருட்டு குடைபிடித்த 
 வெளிச்சத்தை 
உமிழ்கிறது 
நிழல்.... 
வட்டவட்டமாக ..

அவளின் வியர்வை 
மழை நனைத்த 
கூந்தலில் சொட்டு கின்றது 
நட்சத்திர பூக்கள் 


பெய்த  மழையில் 
வெளிச்சத்தை சேகரித்து 
தெளித்து எழுந்தது 
வானவில் கோலங்கள்...

வர்ணம் உதிர்த்து 
பறந்தது அந்த 
பால் நிற பட்டாம்பூச்சி 
அங்கொன்று இங்கொன்றுமாய் 
பச்சையும் சிவப்பும் ...



http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4819

Posted by shammi's blog at 6:27 AM 0 comments
Labels: உயிரோசை

Tuesday, September 6, 2011

அவன் ...அவள் ..அது ..




அவன் 
ஏதோ ஓர் அடர்வண்ணம்
நிரப்பியே அவன் எழுதுகிறான்
பலசமயம் அவை புரிவதாயில்லை ..
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று
முரண்பட்டும்  ஒட்டிக்கொண்டும்
கையெழுத்து வேண்டாம் என
மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில்
பிரதி எடுக்கிறான் அப்போதும்
அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய்
அப்பிக்கொள்கின்றன
அவள் ..
எழுதிய வார்த்தைகளினூடே
கூறா மொழிகளையும்
சேர்த்தே படிக்கிறாள் ..
விழிகளின் மொழிகளை
இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து
அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகள்
அழகாய் தனித்து தெரிந்தன
அடர் நிறமாய் ...
அது ...
சிரித்துக் கொண்டிருந்தது
அது ...
இவனுக்கும்
அவளுக்கும் இடையே ...
சிக்கல்களின் துவக்கம் ...
தொடக்கங்கள் வாதித்து
பின்னூட்டங்கள்  கொடுக்கையில்
கசப்புகள் வெளிவரத்துவங்கின ....
வெளிறிப்போன நிறமிகளின்
அடர் வர்னமென ...
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4745

http://puthu.thinnai.com/?p=3923
Posted by shammi's blog at 12:30 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ▼  September (3)
      • எங்கிலும் இருக்கும் அவன்
      • காட்சிகள்
      • அவன் ...அவள் ..அது ..
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio