skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Friday, August 19, 2011

நீ யார்???




கண்ணாடி முன் நிற்கையில்
என்னை விழுங்குகிறாய் 
பிம்பமாய் விழுந்திடும்
உன்னை மறைக்கும்
நீ யார் ?
என்ன உன் பெயர் ?
ஏன் வருகிறாய் என்னுடனேயே?

விவாதிக்கையில்  என்றுமே 
எதிர் சாட்சியம் சொல்லும் நீ
சரியெனவும் தவறெனவும் 
சிக்கல்களுண்டாக்கி 
அவிழா முடிச்சுக்கள் கோர்த்து 
குற்றமாலை வாசிக்கிறாய்
சரி சரி இனி இப்படி இருக்காதே 
எனப் பிடி தளர்த்துகிறாய்
சிலந்திகள் கோர்த்துவிட்ட 
பின்னலாடையென இறுகி 
மூச்சறுந்து போகும் வேளையில் 


விட்டு விட்டு சுவாசம் தவிர்க்கிறாய் ..
மெல்ல மெல்ல சிக்க வைத்து 
விடுவித்து ஆவி விடுத்து மூச்சு பிரிகையில் 
மட்டுமேன் சட்டையாய் அவிழ்கிறாய்???
Posted by shammi's blog at 9:22 PM 4 comments
Labels: உயிரோசை

Sunday, August 14, 2011

எங்கோ தொலைந்த அவள் . ..


யன்னல்கள் ஏதுமற்றிருந்த 
அந்த ஒற்றையறையின் கதவுகள் 
சாத்தப்பட்டே இருந்தன 

எப்போதும் அலறல்களும் 
கூச்சல்களும் அங்கே 
கசிய விடப்பட்டிருக்கும் 

ஒலித்துகள்கள் ஒவ்வொரு 
அணுவிலும் ஏற்றப்பட்ட 
உடல் அதிரத்துவங்கும்

மௌனமான நேரங்களில் கூட 
செவிகளில் ரீங்காரமிடும்
அந்த அழுகையின் ஒலி
 
அவளிலிருந்து
அந்த அறைக்கு 
விடுதலை தந்தது 
ஒர் மரணம்

மீண்டும் பூட்டப்பட்ட
அந்த அறைக்குள் 
அவள் தனித்து
கூச்சல்களும் அலறல்களும் 
அழுகைகளும் 
மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் ..
http://puthu.thinnai.com/?p=3239


Posted by shammi's blog at 10:05 PM 10 comments
Labels: திண்ணை

Tuesday, August 2, 2011

கனா தேசத்துக்காரி


கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள்
என்றுமே தனித்திருந்தாள்
அம் மாய உலகில் தனக்கெனவோர்
அரியாசனம் அமைத்தவள்
பிரஜைகளையும் உருவாக்கினாள்

அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர்
அதில் அனைவரும்
பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள்
அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள்
வெளிர் நிறங்கள் தாங்கிய
போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை


மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில்
வாரி இறைத்தபடியிருந்தன
தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன
ஒவ்வொரு நிறமும்
கோரமாய்  குணம் கொண்ட
வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில்
நனைந்த கோழிக் குஞ்சொன்றாய்
தப்பும் எண்ணம் ஏதுமற்றுப்
பலியானது மௌனமாய்...
கனாக் காண்பதேயில்லை இப்போதெல்லாம் அவள் ..

Posted by shammi's blog at 9:35 AM 3 comments
Labels: திண்ணை

அவன் ஆனவன்




பெயர்களேதுமற்றே 
உருவாகிறான்
இருளின் சுவடுகளில் 
அடையாளமின்றித் திரிந்து 
காற்றினூடு சஞ்சரிப்பவனுக்கு
இப்பொழுதும், எப்பொழுதும் 
கொடுக்கப்படவேயில்லை
பெயர்களேதும் 

அன்னியர்களையும் ஈர்ப்பதே செயலாகியவன்இருளின் சப்தம் நிரம்பிய
அறையின் கதவுகளிடையே 
முனகிக் கொண்டிருந்தான் 

பதிப்பிக்க முயன்று பின் 
கையெழுத்துப் பிரதியுடன் 
நின்று போனது
என்னில் அவனது வார்த்தைகள் 



தொடர்வதிலேயே தொடர்ந்து 
நின்று விடும்
எங்கள் இறுதிச் சந்திப்பு என்றும் 
வரையறுக்கப்படுவதே இல்லை 


அந்திம வேளைகளிலும்
வார்த்தைகளைத் துப்பி

கவிதை செய்தே 
என்னை துரத்துகிறான்  

வெற்றுக் கோப்பைகளை  நிறைக்கும் நீரினைப் போல 
நுரைத்துப்  புறப்பட்டு
வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து 
இறுதியில் அடங்குகிறான் 
பெயரேதுமற்றவன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4604
Posted by shammi's blog at 9:34 AM 3 comments
Labels: உயிரோசை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ▼  August (4)
      • நீ யார்???
      • எங்கோ தொலைந்த அவள் . ..
      • கனா தேசத்துக்காரி
      • அவன் ஆனவன்
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio