skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Monday, November 22, 2010

விடியாக்கனவு ... !


நினைவுகளின் பொதி  சுமந்தவள்
மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே 
நடந்து வருகிறாள் ...
கனவுகளின் சாயல் கொண்டு 
கனம் தாங்கா
நடையிலோர் தள்ளாட்டம் 
மழைகளின் சாரல்களில் சில 
சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள் 
அவைகளின் பாரத்தில் 
நிலம் தன் சரிவை  கூட்டியது
மனிதர்களை விழுங்கியும் 
கோர பசி தணிய மறுத்தது அவற்றின்

பயந்து போனவள் 
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து 
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும் 

அமிர்தத்திற்கு அடித்துக் கொண்டதில் 
ஆலகால விஷமும் அதில் கலந்தது 
சர்ப்பம் என இரு நாக்கு நீட்டி 
விழுங்க எத்தனித்த படி 

சிக்கிய வார்த்தைகள் அவளின் 
கனவுகள் ஆகிட
மயங்கிச் சாய்ந்தவளை 
அகோர பசி கொண்ட நாகங்கள் 
நாவுகளைச் சுழற்றிய படி விழுங்கின


Posted by shammi's blog at 7:09 AM
Labels: உயிரோசை, திண்ணை

3 comments:

மதுரை சரவணன் said...

//பயந்து போனவள்
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும் //

அருமை... பகிர்வுக்கு நன்றி..

November 22, 2010 at 8:22 AM
கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

கவிதை அருமை!

November 22, 2010 at 8:32 AM
shammi's blog said...

nandri madurai saravanan..
nandri kanakkadhalan...

December 14, 2010 at 10:18 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ▼  November (4)
      • முகமூடி!
      • விடியாக்கனவு ... !
      • முள் பயணத்தினிடையே
      • ஐந்தறிவு பார்வை!
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio