skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Monday, November 29, 2010

முகமூடி!


முகம் உருக
உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும்
நாளங்களோடு
அழுகல் வாடை ........
விதவித சாயங்கள் ....
சில நேரம் பச்சையாய் ....
சில நேரம் சிவப்பாய்.....
நேரத்திற்கு ஒன்றாய்
நிறம் மாறும் உறவுகள் .....
வயோதிகத்தின் இறப்பை
ஜீரணம் செய்ய மறுக்கும்
வாழ்வியல் பிரயத்தனம் .....
ஓரங்க நாடகம்
அரங்கேறியது ....
பங்கு பெறுவோருக்கு கூலி ....
பங்கிட்டுச் செல்லும்
எண்ணமற்ற சுயநலத்தோடு
திசைக்கொன்றாய் பறவைகள் கூட்டம்
வித வித தேடல்களோடு
இரை கிடைத்ததும்
பறந்திடும் யோசனையில்
நன்றி 
திண்ணை ....
Posted by shammi's blog at 7:11 AM 6 comments
Labels: திண்ணை

Monday, November 22, 2010

விடியாக்கனவு ... !


நினைவுகளின் பொதி  சுமந்தவள்
மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே 
நடந்து வருகிறாள் ...
கனவுகளின் சாயல் கொண்டு 
கனம் தாங்கா
நடையிலோர் தள்ளாட்டம் 
மழைகளின் சாரல்களில் சில 
சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள் 
அவைகளின் பாரத்தில் 
நிலம் தன் சரிவை  கூட்டியது
மனிதர்களை விழுங்கியும் 
கோர பசி தணிய மறுத்தது அவற்றின்

பயந்து போனவள் 
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து 
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும் 

அமிர்தத்திற்கு அடித்துக் கொண்டதில் 
ஆலகால விஷமும் அதில் கலந்தது 
சர்ப்பம் என இரு நாக்கு நீட்டி 
விழுங்க எத்தனித்த படி 

சிக்கிய வார்த்தைகள் அவளின் 
கனவுகள் ஆகிட
மயங்கிச் சாய்ந்தவளை 
அகோர பசி கொண்ட நாகங்கள் 
நாவுகளைச் சுழற்றிய படி விழுங்கின


Posted by shammi's blog at 7:09 AM 3 comments
Labels: உயிரோசை, திண்ணை

Monday, November 15, 2010

முள் பயணத்தினிடையே


முடிவற்றுத் தொடர்கின்றது
போடப்பட்ட பாதைகள் வழியே
முற்களாலானதோர் பயணம்
களையக் களைய
வளர்ந்து கொண்டே வருகின்றன
முற்கள்
கீறல்கள் வழியே பீறிடுகிறது குருதி
வழித் தடமெங்கிலும்
கெஞ்சிச் சலிக்கின்றன
நொந்திடும் பாதங்கள்
இளைப்பாறிட நிற்கையில்
வலி தாளாமல் கதறுகையில்தான்
மீண்டும் மீண்டும் அடிக்கின்றது காலம்
கூரிய முற் சாட்டை கொண்டு
ஆதரவேதுமின்றியே
தொடந்திடும் பயணங்களிடையே
முட்கள் மட்டுமேன் செழித்து வளர்கின்றன
என் சுவடுகளில் மட்டும்

நன்றி 

திண்ணை 
Posted by shammi's blog at 11:26 PM 1 comments
Labels: திண்ணை

Friday, November 12, 2010

ஐந்தறிவு பார்வை!


நெல்லி மர உச்சியிலும்
எதிர் சாரி ஜன்னலிலும்
பரிச்சயமானோம்
சங்கேதங்களும்
பார்வைகள் மட்டுமே
நம் பாஷைகளாய்..
சோறூட்டும் வேளைகளில்
தவறாமல் சந்தித்தோம்
பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு..
மெல்ல இறுகியது நட்பு..
மரத்தை வீழ்த்த
கோடரியோடு ஆட்கள் வந்த
ஒரு நாள்..
மௌனமாய் வேடிக்கைப் பார்த்தேன்
செய்வதறியாது..
கிடைத்த அவகாசத்தில்
உன் குஞ்சுகளை இடமாற்றம் செய்தாய்..
நடுவே.. ஏறிட்டு
ஒரு பார்வை பார்த்தாய்
அதில் -
அத்தனை அர்த்தங்கள்....

நன்றி 

திண்ணை 

Posted by shammi's blog at 5:32 AM 6 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ▼  November (4)
      • முகமூடி!
      • விடியாக்கனவு ... !
      • முள் பயணத்தினிடையே
      • ஐந்தறிவு பார்வை!
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio