skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Thursday, September 30, 2010

முற்றுப்புள்ளி




மறுதலிக்கப்படா  கேள்விகள் உட்சூழ
உணர்வுகளின்  பதற்றம்
சமன்படுத்தப்படாத
விடைகளின் உந்துதலில் 
வட்டக் கயிறு இறுக்கியது 
மூச்சுக் குழாய் உடைந்து 
ஆன்மா மட்டும் தனித்துப் போனதில் 
வாழும் உயிராசை மீளவும்...
தொடர்ந்தன சொட்டு சொட்டாக 
வெப்பக் குருதித் துளிகள்....

நன்றி 
திண்ணை ....

Posted by shammi's blog at 7:39 PM 0 comments
Labels: திண்ணை

Monday, September 13, 2010

எரிமலைகள்




தவித்தபடி தண்ணீர் கேட்டது 
தர்க்கிக்கும் மனிதர் மத்தியில் 
காலால் உதைத்துத் தள்ளப்பட்டு 
பூமிக்குள் பதுங்கியது 
உள்ளார்ந்த ரணம் 
முட்டி மோதி 
புடைத்தபடி  எழும்பியது 
சிறு குன்றாய்
மீளவும் அவமதிக்கப்பட
வளர்ச்சியின் வேகம் ௯ட்டியது
முகில்களை எட்டிப் பிடிக்கையில் 
வேறுபட்ட உணர்வுகள்  தோன்ற 
குளிர்ச்சியின் தன்மை 
உச்சியில் பரவ  
அடக்கப்பட்ட கோபத்தின் 
சாயல்கள் வெடித்துக் கிளம்பின 
செந்நிறக் குருதியாய்
போகும் வழியெலாம் 
எரித்துக் கொண்டு ...
சாம்பலாய் இருந்தன  மயானக் காடுகள் ...

நன்றி 
உயிர்மை / உயிரோசை 
Posted by shammi's blog at 7:31 AM 0 comments
Labels: உயிரோசை

அகதி






எறிதழலின் சீற்றம் 
விழிகளில் பற்றியெரிய
 ஏந்திழை ஏக்கம் 
உருகிக் கானல் நீரானது 

சுதந்திர தாகமது
பஞ்சுத் துணிக்கைகளாய் 
பறந்து திரிய .....
பறிபோனது இருப்பிடம் 
பின்பெனது தேசம் .....

அகதி வாழ்க்கை 
அநித்தியமாய் தொடர....
கடலும் கடலோடிய நாடும் 
கற்பனையாகியே போனது

கனவுகளில் கதறல்களும் 
ஓலங்களும் ....
சங்கிலியாய் துரத்த ....
ஒவ்வொரு குண்டு வெடிப்பும் 
ரத்தச் சகதியும் 
நித்ய காட்சிகளாய் .....

நாடு மீளுமாசை தொடர
நான் தேசம் வந்த போது ....
ஆரவாரமாய் வரவேற்றது 
சூனியமான என் பூமி 
சுற்றமில்லாமல் 
சொந்தமில்லாமல் ...
தனித்தொரு தீவு .... 

நன்றி 
யூத்புல் விகடன் ....

Posted by shammi's blog at 7:27 AM 0 comments
Labels: யூத்புல் விகடன்

Monday, September 6, 2010

கனவுக் காலம்







நாற்திசையில் கண் சுழல
குவிக்கப்பட்ட எண்ணங்கள் 
கதைக்கக் கிளம்பின
முன்னும் பின்னும் முரண்டியபடி 
பூனையின் கால் கொண்டு பதுவிசாய் 
இடைப்பட்ட கணங்கள் 

கடிகாரத்தின் முட்களில் 
மணித்துளிக்கான அவகாசம் 
ஒன்றுள் ஒன்றாய் ஒடுங்கி 
விரிந்த பொழுதுகளில் 
வினாடிகள்  ஒவ்வொன்றிலும் 
ஓர் நம்பிக்கையின் பயணம் 
புதுப் புதுக் கனவுகளாய்....

நன்றி 
உயிரோசை ...

Posted by shammi's blog at 8:04 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ▼  September (4)
      • முற்றுப்புள்ளி
      • எரிமலைகள்
      • அகதி
      • கனவுக் காலம்
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio