skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Tuesday, May 11, 2010

போதுஞ்சாமி இந்த பொழப்பு......





Potato farmers too threaten to commit suicide in West Bengal




கண்னுக்கு எட்டின வரைக்கும் 
பாளம் பாளமாய் 
வெடித்து நிக்கிது
இந்த நஞ்ச நாலு ஏக்கராவும் ..... 

குறங்காட்டு  புல்லு கூட 
 காஞ்சு போய் கிடக்குது .....
ஆடு மாடு கூட விக்கி போய் நிக்கிது .... 
வானம் பார்த்த பூமியா 
 இப்போ நஞ்ச புஞ்ச எல்லாமே.......
ஏத்தம் எறச்ச காலத்தில கூட 
சீக்கிரமா முடிஞ்ச வேல 
கரண்ட்காரன் புண்ணியத்தில 
கால கரெண்ட்டு மதிய கரண்டுட்னு  
சரியாய் கரண்ட்டு இல்லாம இழுத்து கிட்டு 
பொழுதே சரியாய் போகுது 

போன வருஷம் மஞ்ச போட்டு 
மிச்சம் ஒன்னும் ஆகல.....
இந்த வருஷம் 
மஞ்ச விலை ஆகாசத்தில பறக்குது ......
எங்க ஊர் கிடங்கு பூட்டியே கிடக்குது 
இதுல எப்படி இருப்பு வெக்கறது 
சேத்தறது சேமிக்கிறது?.......

காட்டு கம்பு படி நாப்பது ரூபாயாம் ....
பக்கத்துக்கு ஊட்டு  செல்லாத்தா 
மூலனூர் சந்தையில வாங்கியாந்தா ....
நல்ல வேல கம்பு கொஞ்சம் நட்டதால
அந்த செலவு எனக்கு இல்ல.......

வைகாசி மாசத்துல 
பேத்திக்கு கண்ணாலம் பண்ணிரோனும் கந்து கட மாப்பிள
ரெண்டு மூணு வந்துச்சு
விவசாயத்துக்கு 
அவள கொடுகிறதா இல்ல.........
இந்த ஒரு கண்ணாலத்த 
கண்ணார பாக்கனுஞ்சாமி .....
நிம்மதியா கண்ணமூடிடுவேன்  .....
என் பேத்தியாவது நல்லா இருக்கா
இந்த வெய்ய வெட்டில அலையாதன்னு .
போதுஞ்சாமி இந்த வானம் பார்த்த 
பொழப்பு .....

நன்றி 
யூத்புல் விகடன் .

Posted by shammi's blog at 4:48 AM
Labels: யூத்புல் விகடன்

3 comments:

ஜெயசீலன் said...

விவசாயத்தின் வலிய அழகா வெளிப்படுத்திருக்கிங்க!!!! அழகு....

May 23, 2010 at 9:21 AM
shammi's blog said...

thanks jayaseelan

June 12, 2010 at 9:30 AM
shammi's blog said...

nandri
youthful vikatan...

August 15, 2010 at 10:40 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ▼  May (4)
      • தூது.....
      • அலையலை
      • நங்௯ரம் !!!
      • போதுஞ்சாமி இந்த பொழப்பு......
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio