skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, February 28, 2010

இவள்...


மரபுகள் மீறி சிந்திக்கும்
இலக்கணம் தாண்டிய கவிதை
இவள்....
புது கவிதையா?
புதிர் கவிதையா?
இல்லை இவள்...
புதிரான புது கவிதை..
.
சுட்டெரிக்கும் சூரியனா?
குளிர்விக்கும் வெண்ணிலவா?
இல்லை இவள்...
குளிர்விக்கும் சூரியன்...
ஆம்
என்றும்...
முடிவுகளில் ஆரம்பம் தேடும்
இவள்....
குளிர்விக்கும் சூரியன்...
புதிரான புது கவிதை.....
Posted by shammi's blog at 11:57 PM 8 comments

'தனிமை'


இருட்டறையில் ....
கதவோரமாய் ....
சுருண்டு கிடந்தேன் .....
சுவரில்லா சித்திரமாக ....
'தனிமை'யின் கொடுமையில்
உயிர் இருந்தும் நடை பிணமாய் ....

உனக்கு தெரியும் உன்னில்
நான் அடக்கம் என்பது ....
தெரியாதது...
நீயில்லாமல் நான்
அடங்குவது

ஏன் சென்றாய்?
எங்கு சென்றாய்?
குயில் கூவும் வேளையிலும் ....
கோட்டன் கத்தும் வேளையிலும் ...
என்னை தனியாய் தவிக்க விட்டு.....
விளக்கில் சிக்கிய விட்டிலாய்
நான் .....
மரணத்தின் ஓலத்துடன் ....

இதுவும் கடந்து போகும்
நீ அடிக்கடி சொன்ன போது ..
தெரிய வில்லை நீயும்
என்னை கடந்து போவாய்
என்பதை .......
Posted by shammi's blog at 11:55 PM 5 comments

இரவு வானம்


இயற்கை நெசவாளியின்
தேர்ந்த படைப்பின்
அணிவகுப்போ இந்த
வானபோர்வையின் வண்ண சிமிட்டல்கள் .

வேண்டிய சாயங்களை
பூசி கொள்கிறது
மனம்......
மகிழ்ச்சியும் துக்கமும்
ஊடு பாவும் சந்து பாவுமாய்

காதலனை கை பிடிக்க போகும்
கனவுகளை சுமந்து கொண்டு
மகிழ்வோடு விண்மீன்களை
எண்ணி கொண்டு
கன்னி ஒருத்தி.......

கிழிந்த நாராய்
கயிற்று கட்டிலில்
காலனுக்காக காத்து கொண்டு
நட்சதிர கோள்களை நொந்து கொண்டு
கிழவி ஒருத்தி......

நன்றி
திண்ணை 
Posted by shammi's blog at 11:36 PM 6 comments
Labels: திண்ணை

ஒற்றை வார்த்தை ....


போய் கொண்டே இரு..
உனக்கான பாதை தெரியும் என்றார்கள்
போய்க் கொண்டே இருக்கிறேன்...
உன்
ஒற்றை வார்த்தைக்காக....
பாதை நீண்டதே தவிர ...
பயணம் முடியவில்லை.....

படிக்க நான் எடுக்கும் புத்தகத்தில்
கூடத் தொக்கி நிற்கிறது
உன் ஒற்றை வார்த்தைக்கான தேடல்...
தெரிந்தே கொடுத்த ரணம்
வார்த்தைகளின் வடு..
வலிக்கிறது....
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான்.....

பேசும் போது
தோன்றாத சலனம்
உன் மௌனத்தில் தோன்றியது
வார்த்தை தவறுவதில்லை நீ
வதைக்கிறாய் உன் அமைதியால்
ஆதலால் மீண்டும் கேட்கிறேன் ...
மன்னித்து விடு............
Posted by shammi's blog at 11:28 PM 3 comments

எப்போதும் நீ..


கண்மூடி காத்து இருந்தேன்
கனவுகள் வரவில்லை
கற்பனைகள் வரவில்லை
காரணம் கண்ணுக்குள்
எப்போதும் நீ..

சில கேள்விகள்
சில பதில்கள்...
சில பல பகர்தல்கள்
சில் என்ற நீருற்றாய்
நெஞ்சுக்குள் காரணம்
எப்போதும் நீ..

தூக்கம் தொலைத்த போதும்..
நெஞ்சம் நெகிழ்ந்த போதும்..
"நான்"
என்றும் "நானாகவே"
காரணம் எப்போதும் போல்
நீ...நீயே தான்
Posted by shammi's blog at 11:20 PM 3 comments

MISSING


Sometimes being alone
Depicts the very thought of you
But...
Missing "ME" in "YOU"
Makes it's own compromise.....
Posted by shammi's blog at 8:36 PM 5 comments

LIVING.....


Life is not living within limits....
It's living in edges too....
When denied smallest approvals ....
It happens to be the biggest betrayals
So every thing' COUNTS' in' LIFE'
YES.....
It does 'COUNTS'....
Just move on
Its only a miles ahead......
Posted by shammi's blog at 8:23 PM 1 comments
Newer Posts » Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ▼  February (7)
      • இவள்...
      • 'தனிமை'
      • இரவு வானம்
      • ஒற்றை வார்த்தை ....
      • எப்போதும் நீ..
      • MISSING
      • LIVING.....

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio