skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Saturday, June 25, 2011

வினா ....




இருளை உள்ளடக்கியே 
பரவிக்கொண்டிருக்கின்றன
வெளிச்சக் கீற்றுக்கள் 

எங்கும் துளை போட இயலாமல் 
காற்றுவெளியில் இறுகி 
கோளங்களாய் உருண்டு 
வீசப்படாத எரிபந்துகளாய் 
அந்தக் கோள்கள்...

வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ
திசை எங்கிலும் விரவிக்  கொண்டே 
தனித்தொரு பாதையமைத்து 
எதிலும் படாமல் விலகியே செல்லும் 

என்றும் விடை தெரிவதே இல்லை
சில கேள்விகளுக்கு  மட்டும்

Posted by shammi's blog at 8:55 PM 1 comments
Labels: திண்ணை

Friday, June 24, 2011

முதுகெலும்பா விவசாயம் ?



நல்லா செழித்து வளர்ந்துடுச்சு 
இந்தத் தலவாசல் வேப்ப மரம் ..
போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு 
இது தான் போக்கிடம் 
எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் ...
மோட்டுவளைய பாத்துகிட்டு 
எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ?
ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் 
வூடு தாவாரம் இறங்கிப்  போச்சு ..
இனி  ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ?


அந்த தாழ்வாரத்துல 
கொறஞ்சது எழுவது பேர்
உக்காந்து சாப்பிட்டது
கண்ணுக்குள்ள நெனப்பா வருது
இருவத்தஞ்சு படி அரிசி போட்டு மாவிடிச்சு 
திருமங்கலத்து அத்தை வீடு
புத்தூர் சித்தி வீடு 
இப்டி சொந்தக்காரவுக  வூட்டுக்கெல்லாம்  கொண்டு போயி
பத்துப் பன்னெண்டு நாள் இருந்து வாரது
எல்லாம் இப்போ இல்ல 

வீடு நெறஞ்சு மனசு நெறஞ்சதெல்லாம் 
இனி வரப்போறதில்ல 
பட்டணம் போயிப் புள்ளைங்க படிக்க ஆரம்பிச்சு 
வேலைக்கும் போய்ட்டாங்க ....
அவிங்களுக்கும் பாவம் பொழுது சரியாத்தான் போகுது 
வார போற நாளும் வேகமா ஓடுது 
இதுல சொந்தம், பந்தம்  என்ன தெரியப் போகுது ?
இப்போதைக்கு இந்த ஊர்ல மிஞ்சியிருக்கிறது 
கெழக்குவளவு சபாபதியும்,
மேக்காலவளவு  குப்புசாமியும் நானும் தான் 
எங்களுக்கப்றம் 
இந்த ஊர்ல விவசாயம்  என்ன ஆகும் ?

மண்ணாப் போன நடுவளவு தான் 
நெனப்புல வருது ஆமா

இந்தியாவோட  முதுகெலும்பு , கிராமம் 
விவசாயம்னு சொல்ற ராசாங்க,
இது என்ன கணக்கு அப்பு ? 
Posted by shammi's blog at 10:49 AM 2 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்

Saturday, June 11, 2011

நிழலின் படங்கள்

எங்கிருந்தோ கூவுகிறது
தனித்த அந்திமப்பறவை ஒன்று
அலறல்களடக்கி
மெல்லிய  அனத்தல்கள்
மட்டுமே கூவல்களாக
அதன் சப்தங்கள் நடுநிசியில்
உயிரில் பாய்ந்து ஊடுருவி
சிலிர்த்து எழும்பின ரோமகால்கள்

சொந்தங்களையிழந்த தாக்கம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்
ரத்தசகதியில் கிடந்த
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற

தொலைத்த சுவடுகளில்
பாதம் பதித்து  மீண்டும்
எழுந்தன மூடி வைத்த
நிழற்படங்கள்
Posted by shammi's blog at 9:13 PM 3 comments
Labels: திண்ணை

Tuesday, June 7, 2011

மௌனம்

மனதோடு மௌனம் 
பழக்கி பார்க்கிறேன் 
இருந்தும் முரண்டியது 
மரண கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில் 
தப்பி தெறிக்கும் 
ஓசை , ..சொல்லாமல் 
மௌனம் கலைக்கும் 
அழைப்பிதழ்...

சுயம் அடிபடும் வேளைகளில் 
ரௌதரம் பழகவில்லை 
மௌனம் பழக்கி கொள்கிறேன் 
 வெளியிட விரும்பா வார்த்தைகளை 
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன் 

ஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது 
மௌனங்கள் மெல்ல 
இரை கொள்ளும் .....

எக்காளமிடும் பார்வைகள் ,
அனல் தெறிக்கும் வார்த்தைகள், 
 அனைத்து முயற்சிகளுக்கும் 
 மௌனமே உரையானது ...

 வார்த்தைகளை 
நீயே புசி..
அவற்றின் மரண கூச்சல்கள் 
துணை கொண்டு ....
நானோ  மௌன போர்வையில் 
குளிர் காய்கிறேன் ....
http://puthu.thinnai.com/?p=963
Posted by shammi's blog at 9:32 PM 0 comments
Labels: திண்ணை

அரங்கேற்றும் விந்தையின் கவிதை



அவைகள் கதிர்களாகவே
ஊடுருவுகின்றன
அனைத்தையும் தாண்டி

பிரபஞ்ச வெளிகளின் 
ஓர் பகுதி உள்ளில் செலுத்தப்படுகின்றன
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்

ஊர்ந்து செல்லும் அம் மனச் சாய்கதிரை
ஓர் மையப் புள்ளியில் அமைதியாகிறது

பிரார்த்தனையின்  கடைசிப் பத்தியை
படித்து முடித்த பின்னெழும்
ஏகாந்த அமைதியை ஒத்தே
செயற்கையின் ஒளித் தடங்களில் ஓர் இயற்கை 
அரங்கேற்றும் விந்தையின் கவிதை ...

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4398
Posted by shammi's blog at 9:31 PM 1 comments
Labels: உயிரோசை

Wednesday, June 1, 2011

திரைமறைவு நாடகம்

எங்கேயோ திரை மறைவில்
நடக்கிறது நாடகம்
அறிந்தோ அறியாமலோ

ஒவ்வொரு பாத்திரப்படைப்பும்
ஒன்றை மிகைப்படுத்தியவாறு
எல்லாவற்றிலும் ஒரு நிழல் யுத்தம்

சாதகப்பறவை ஒன்று
மழைநீர் தேடியபடி
பறந்து திரிந்தது அல்லோகலப்பட்டது
நிழல் நீர் அருந்த பிடிக்காமல்
உயிர் விட்டது

மரப்பாச்சி பொம்மையோ
அடுத்த கொலுவிற்கு தயார் ஆகியது

எங்கோ ஓர் குயில் கூவத் துடித்தபடி ஊமையானது
பின்புலமாய் ஆந்தைகள் ஓலம்
ஆவேசமாய் அரங்கேறியது

பொய்மைகள் ஒன்றுக்கூட்டி
மெய்யிற்கு தளைப்பூட்டியது
இப்போதோ மெய்யும் பொய்யும்
இரண்டறக்கலந்து...
Posted by shammi's blog at 2:45 AM 0 comments
Labels: வல்லினம்
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ▼  June (6)
      • வினா ....
      • முதுகெலும்பா விவசாயம் ?
      • நிழலின் படங்கள்
      • மௌனம்
      • அரங்கேற்றும் விந்தையின் கவிதை
      • திரைமறைவு நாடகம்
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio