இருட்டு குடைபிடித்த
வெளிச்சத்தை
உமிழ்கிறது
நிழல்....
வட்டவட்டமாக ..
அவளின் வியர்வை
மழை நனைத்த
கூந்தலில் சொட்டு கின்றது
நட்சத்திர பூக்கள்
பெய்த மழையில்
வெளிச்சத்தை சேகரித்து
தெளித்து எழுந்தது
வானவில் கோலங்கள்...
வர்ணம் உதிர்த்து
பறந்தது அந்த
பால் நிற பட்டாம்பூச்சி
அங்கொன்று இங்கொன்றுமாய்
பச்சையும் சிவப்பும் ...
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4819
0 comments:
Post a Comment